என்ன விக்ரா..ந்தா...? KC..58

175 41 33
                                    


🔱யின்
💞காதல் சித்திரம்💞
🌻சித்திரம்..58

கதிர் மீது கோபம் கொண்ட முல்லை வேகமாக கீழே இறங்கி வந்தவள்... அறைக்குள் சென்று கதவை தாழிட போனவளை தடுத்த கதிர் உள்ளே நுழைந்தவன் கதவை தாழிட்ட படி அவள் அருகில் சென்று அவளை தன்வசம் அணைத்து...அவள் காதோரத்தில் இதழ்களை பத்திதப்படி ....

கதிர் : அடியேய் கோச்சுக்காத டி ...நீ என்கிட்ட உண்மையை மறைத்து இருக்கன்னு தெரிஞ்சதும்  எனக்கு எவ்வளவு கோபம் வந்துச்சு தெரியுமா.... நீ ஏன் இப்படி இருக்க... அப்போ என் காதல் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா... உனக்கு எந்த பிரச்சினை நடந்தாலும் என்கிட்ட சொல்ல கூடாது என்று நினைக்கிறாயா... இல்ல எல்லாத்தையும் நானே தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறியா....இல்ல
உனக்கு என்னை  பிடிக்குமா... பிடிக்கலையா.. கடமைக்கு என் கூட இருக்கியான்னு  இப்படி ஆயிரத்தெட்டு கேள்வி என் மண்டையில ஓட ஆரம்பிச்சிருச்சு ....அந்த கோபத்தில்  வெளிப்பட்ட வார்த்தை தானே தவிர... மனசார நான் உன்ன அந்த மாதிரி எல்லாம் நினைச்சதே இல்ல

முல்லை : இங்க பாருங்க...வி வி  விக்ரம ராஜ கதிரவனே .... நான் மாடியில் சொன்னது தான் இப்பவும் சொல்றேன்...நான்  உங்க மேல வச்சிருந்த காதல் நம்பிக்கை எல்லாமே கொஞநேரத்துக்கு முன்னாடி நீங்க சொன்ன வார்த்தையால சீதைந்து போயிடுது... இதற்கு மேற்பட்டு நீங்க இருக்கிற திசை பக்கம் கூட என் கண்ணு திரும்பாது இதை நான் கோபமாக சொல்லல.. மனசு வெறுத்து சொல்றேன் 

கதிர் : ஏய் அப்படியென்ன நடந்திடுச்சு.... இப்ப நான் என்ன கேட்டேன்

முல்லை : போதும் நிறுத்து ...என்ன கேட்டியா ...ஏன் உனக்கு நினைவில்ல..... இதே மருது ஒரு தடவை எனக்கு போன் பண்ணி இந்த தெருவுல இருக்குற எல்லாரும் நீ என்னை வச்சிருக்கிறன்னு சொல்றாங்க..... உனக்கு அசிங்கமா இல்லையான்னு கேட்டான்... ஏன் உன் அக்கா கணவரும் இதையேதான் கேக்குறாரு...இந்த  தெருவில் நான் வெளிய போகும்போது என் காதுபட இதே வார்த்தையை சில ஆண்களும் பெண்களும்  பேசிகிட்டு  தான் இருக்காங்க... எனக்கு அப்பல்லாம் இதோ இந்த மெஷின் என் காதுல இருந்தாலும் காது கேட்காத மாதிரி தான் கடந்துபோய் இருக்கேன் ...ஆனால் இப்போ நீ

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now