இதழ்கள் எனும் இலையில் விருந்து kc49

197 38 18
                                    

🔱யின்

💞காதல் சித்திரம்💞

🌻சித்திரம்.. 49

மறுநாள் காலை ஆஸ்ரமத்தில் உதயா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க ...சக்தி இன்னொரு கட்டிலில் படுத்து இருந்தவள் பொறுமையாக எழுந்து வெளியே செல்ல அங்கே லக்ஷ்மியும் தேவியும் பேசிக்கொண்டு இருக்கும் காட்சி

தேவி : அக்கா உதயா பாவம் இல்ல

லட்சுமி : ஏண்டி என்னாச்சு

தேவி : நேத்து உதயா பாட்டி வேதநாயகி இருக்காங்க இல்ல அவுங்க கால் தவறி கீழே விழுந்துட்டாங்கன்னு ஹோச்பிடலில் சேர்த்து இருக்காங்க.. அங்க நம்ம கதிரும் உதயாவும் போனதற்கு அந்த யோகி பாபு நாதாரி நம்ம கதிரை ருசிக்காவுக்கும் உதயாவை யாழினிக்கு கட்டி வச்சே தீருவேன் என்று சமபதம் போட்டு இருக்கிறான்..இதுக்கு நம்ம உதயா அம்மா தேன் மொழியும் உடந்தை...

சக்தி : என்ன அக்கா யாருக்கு கல்யாணம்

தேவி : ம் உன் குச்சி மிட்டாய்க்கும் பஞ்சி மிட்டாய்க்கும் ..

சக்தி : யார் சொன்னது

தேவி : யோகி பாபுவும் தேன்மொழியும்

சக்தி : யாரு தேன்மொழி

லட்சுமி : ஏய் தேன்மொழி ..... அவ பொம்பளையே இல்ல ... அந்த சண்டாளி தான் நம்ம மயில் குடிக்க இருந்த பாலில் விஷத்தை கலந்தா

தேவி : என்ன அக்கா சொல்ற

லட்சுமி : ஆமா டி நம்ம எல்லாம் மயில் டான்ஸ் கிளாஸ் ஆரம்பிச்சதும் நான் அங்க தானே வேலைக்கு சேர்ந்தேன் அப்போ இந்த பொம்பளை என்னைக்கும் இல்லாம அன்னைக்கு அங்க வந்து இருந்தா .....அப்போ

((நான்கு வருடத்திற்கு முன்பு நடந்த கதை .....மயில் நடன ஆலயத்தில்))

மயில் : ஆன் அந்த போட்டோ எல்லாம் அங்க வையுங்க ..லட்சுமி அக்கா நடராஜர் சிலைக்கு கீழ் விளக்கு ஏத்தி வையுங்க

லட்சுமி : உன் கையாள நீயே ஏத்துமா

மயில் : நீங்களும் என் அம்மா மாதிரி தான் போங்க போய் ஏத்துங்க சரி கதிர் அண்ணா எங்க இந்த ஊதா மாமா எங்க போனான்

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now