🔱யின்
❤காதல் சித்திரம்❤
❤சித்திரம் 6️⃣5️⃣🌹கதிரின் மருத்துவமனையில் வேத நாயகி பாட்டியை பார்ப்பதற்காக சக்தியும் உதயாவும் வந்து இருக்க அங்கே நடக்கும் காட்சி🌹
சக்தி : உதயா சார்... உங்க பாட்டி ஏன் என்னை பார்க்கணும்ன்னு சொன்னாங்க ... உதயா சார் உங்களை தான் ...சார் என்ன காது கேக்கல
உதயா : கேக்கல
சக்தி : என்ன நெக்கல் பண்றிங்களா நம்ம ஏன் இங்க வந்து இருக்கிறோம்
உதயா : ம் நீ யார்கிட்ட பேசுற
சக்தி : உங்க கிட்ட தான் பேசுறேன்
உதயா : ஓ யாரா பேசுற
சக்தி : இது என்ன கேள்வி
உதயா : சக்தி
சக்தி : ம் சொல்லுங்க சார்
உதயா : சக்தி நான் பேசுறது உன் காதுல கேக்குதா...
சக்தி : என்ன உதய் என்னாச்சு உங்களுக்கு ஏன் நான் ஒன்னு கேட்டால் நீங்க ஒரு பதில் சொல்றிங்க... உங்களை தான் ஏன் அப்படி பாக்குறீங்க ....உதய் கையை விடுங்க ஹாஸ்பிடல்ல எல்லோரும் ஏற்கனவே உங்ககூட நான் உள்ளே வருவதை பார்த்து ஒரு மாதிரி பாக்குறாங்க எனக்கு கூச்சமா இருக்கு ப்ளீஸ் உதய் கையை விடுங்க
உதயா : ஓ......இப்போ யாரும் பார்த்தால் தப்பா நினைக்க மாட்டாங்க இல்ல
சக்தி : ஐயோ உதய் தோள் மேல இருந்து கையை எடுங்க
உதயா : முடியாது நான் இப்படி தான் உன்கூட வருவேன் என்ன பண்ணுவ
சக்தி : உதய் உங்க அம்மா
உதயா : அம்மாவா எங்க..
சக்தி : ம் இவ்வளவு பயம் இருக்கு இல்ல அப்புறம் என்ன ... அதோ நிக்குறாங்க பாருங்க
உதயா : ஐயோ போச்சு... நான் உன் தோள்மீது கை போட்டதை பார்த்து இருப்பாங்களா
சக்தி : சார் ப்ளீஸ் நகருங்க... உங்க அம்மாக்கு பயந்துகிட்டு நீங்க காட்டும் அரவணைப்பு எனக்கு தேவையில்ல போங்க அப்படி
YOU ARE READING
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanfictionbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏