என்னது டாக்டரா..??.. KC.42

169 37 6
                                    

🔱யின்
💕காதல் சித்திரம் 💕
❤சித்திரம் 42

அன்றைய இரவு முல்லை மருதுவிடம் இருந்து மாத்திரையை வாங்கியவள் அதை சக்தியிடம் தர ....மருது அதேசமயம் வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்துவன் யோகி பாபு பணிபுரியும் காவல் தலைமைச் செயலகத்துக்கு செல்ல ...யோகிபாபுவின் பணியாளர் ஒருவர் வெளியே வந்து மருதுவை உள்ளே அழைத்துச் செல்ல....

மருது : சார் வந்துட்டீங்களா நீங்க இல்லாம இங்கே என்ன எல்லாம் நடந்துச்சு தெரியுமா

யோகி பாபு : அந்த கதையெல்லாம் விடு நான் சொன்ன மாதிரி அந்த மாத்திரை அவ கையில போய் சேர்ந்து ரிச்சா ...

மருது: ம் ஆமா சார் ...நான் வேணும்னே மாத்திரையை கையில வச்சு குடுக்க முடியாதுன்னு சொன்னேன் ..அவ அதை என் கையிலிருந்து பிடுங்கிட்டு திமிரா பேசியப்படி மாத்திரையை வாங்கிட்டு போயிட்டா

யோகி பாபு : அவ்வளவுதான்.... புலி பதுங்குவது பாய்வதற்கு தான்னு அந்த பால் காரிக்கு தெரியல.... அந்த பத்து மாத்திரையை உன் கையிலிருந்து பிடுங்கிட்டோம் என்ற மதமதப்புள்ள அவள் இன்னும் அந்த கதிர் கூட சேர்ந்து ஆட்டம் ஆடுவாள் ... ஆனால் அந்த பத்தாவது மாத்திரையை அவள் தங்கச்சி அந்த இரண்டும் கெட்டான் போடும் பொழுது அந்த சக்தியின் உயிர் அவள் உடலை விட்டு பிரியப் போகும் கடைசி நாள் என்பது அவளுக்கு தெரியல ....

மருது : ஆன் சார் ..அவ அடிச்சு சொல்றா .... ரெண்டு மாசத்துக்கு அப்புறம் அவள் உங்க மச்சான் கதிர் கூட இருக்கமாட்டாளாம் ...

யோகிபாபு : டேய் ரெண்டு மாசம் முடிய இன்னும் பத்து நாள் தான் டா இருக்கு இந்த பத்து நாளில் என்னவெல்லாம் நடக்கப் போகுதுன்னு பார் சரி நீ இனிமே அந்த பால்காரி வீட்டுக்கு போகாதே...உன்னை விக்ரா பார்த்தானா தூக்கிப் போட்டு மிதித்து உன் வாயில இருந்து உண்மையை வாங்கிவிடுவான் புரியுதா

மருது : சரி அப்போ வந்து ரெண்டு கெட்டான் உயிர் போயிடுமா

யோகி பாபு : என்ன உன் அக்கா புள்ளை மேல திடீரென பாசமா

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now