வலியும் சுகம் தான் என்னவன் தொடுதலில்.. kc 48

195 34 32
                                    

🔱யின்
💞காதல் சித்திரம்💞
🌻சித்திரம்.. 48

மனோகரனிடம் இருந்து கதிர் முல்லையை காப்பாற்ற ...அதே சமயம் சிங்காரம் அந்த இடத்தை விட்டு தப்பிப்பதற்காக சக்தியை கத்தியை கொண்டு தாக்க போக அந்த கத்தியை உதயா தன் கைகளால் பிடிக்க..அந்த காட்ச்சியை பார்த்த கதிர் ....

கதிர் : ஏய் ஏய் உதயா  ....

என்று கதிர் பதற ....

முல்லை : ஐயோ சக்தி

என்று அலற

சக்தி : ஐயோ சார் என்னாச்சு... கையில ரத்தம்....

கதிர் : டேய் உதயா என்னடா நீ ....கத்தியை கிழ போடு....

முல்லை : சக்தி... என்னாச்சு.. ஐயோ உதயா ரத்தம்.....விக்ரா அவனை சும்மா விடாத...

என்று முல்லை சொன்ன மறு நொடி... கதிர் சிங்காரத்தை எட்டி உதைக்க... அவன் மனோகரன் எடுத்து வந்த வேனில் ஏறி தப்பித்து ஓட..... உதயாவின் வலது கையில் சக்தியை சிங்காரம் தாக்க வந்த கத்தியை தடுத்ததால் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு அவன் கையில் வந்த ரத்தத்தை பார்த்து சக்தியும் அதே இடத்தில் மயங்கி விட..

கதிர் : ஏய் ஊறுக்கா... என்ன இது..... உன் தங்கச்சிய காப்பாற்ற போய் என் தம்பிக்கு தான் காயம் பட்டு இருக்கு ...இவன் மயங்குனால் கூட ஒரு லாஜிக் இருக்கு... இவ ஏன் மயிங்கிட்டா...

முல்லை : என் தங்கச்சிக்கு ரத்தத்தை பார்த்தா பயம்... அதான்..

கதிர் : என்னாமா  சினிமா காட்டு ராளுங்க பாரு... எங்க  நான் இவளை திட்ட போறேன்னு மயக்கம் வந்த மாதிரி நடிக்கிறான்னு நினைக்கிறன்...

உதயா : ஐயோ அண்ணா ...இல்ல... சக்தி உண்மையாவே மயக்கம் போட்டு தான் விழுந்து இருக்கா... அவளுக்கு மயிலை போலவே ரத்தம்னா பயம் போல ..

கதிர் : ஏய் ச்சி வாயை மூடு... அவன் .....உன் கையில வெட்டி இருக்க கூடாது டா... உன் வாயில போட்டு இருக்கணும்...

முல்லை : ஐயோ போதும் நிறுத்து.. முதல்ல உன் ஜீப்ல இருக்கும் தண்ணியை கூடு.... உதயா கையை காட்டு எவ்வளவு ரத்தம் பாரு ஏய் குச்சு மிட்டாய் உதயாவை ஹாஸ்பிடளுக்கு அழைச்சிகிட்டு போ... இவ என்ன தண்ணி தெளித்தும் எழல...

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now