பாட்டி... நீ...லூட்டி... kc 35

201 39 33
                                    

🔱யின்

💕காதல் சித்திரம் 💕

❤சித்திரம் 3️⃣5️⃣

💕💕❤💕❤💕💕💕💕❤💕❤💕❤💕💕❤💕💕

💕மதிய நேரம்...மாணிக்கம் அவர்களின் கைபேசியில் இருந்து சக்தி உதயாவை அழைத்தவள்.... அவனை ஒரு ஆசிரமத்திற்கு வர சொல்ல....உதயா சக்தியை அங்கு வந்து சந்திக்க💕

உதயா : என்ன சக்தி டான்ஸ் கிளாஸ்க்கு வரேன்னு சொல்லிட்டு இங்கே வர சொல்லி இருக்க.

சக்தி : இல்ல சார் நான் உங்களை இந்த விஷயமா தான் பார்க்கனும்னு சொன்னேன்..... அதான் மாணிக்கம் அண்ணா cell ல இருந்து call பண்ணேன்....

உதயா : மாணிக்கம் அண்ணா எங்க

சக்தி : அவருக்கு ஸ்கூல் சவாரி.... அவரு போயிட்டாரு...

உதயா : சரி சொல்லு என்ன விஷயம்..

சக்தி : இவுங்க கங்காவும் யமுனாவும்

உதயா : ஒ... ஹலோ எப்படி இருக்கீங்க

யமுனா : நல்லா இருக்கேன் அண்ணா நீங்க நல்லா இருக்கீங்களா

உதயா : நான் நல்லா இருக்கேன் மா... சொல்லு சக்தி நான் என்ன பண்ணனும்

சக்தி : இல்ல sir இந்த ஆஸ்ரமத்தை நடத்துறவுங்க ஒரு திருநங்கை தான்னு கேள்வி பட்டேன் ... இங்க தான் நான் யமுனாவையும் கங்காவையும் சேர்த்துவிடலாம்ன்னு இருக்குறேன்..ஆனா அதுக்கு முன் பணம் எதாவது கேப்பாங்களான்னு தெரியல.....அப்படி பணம் கேட்டா இப்போதைக்கு நீங்க அந்த பணத்தை கட்டிட்டா நான் அக்கா கிட்ட சொல்லி பொறுமையா உங்ககிட்ட அந்த கடனை திருப்பிக் கொடுத்துடுவேன்...

உதயா : எதுக்கு ஹாஸ்டல்ல எல்லாம் தங்கனும் பேசாம கதிர் அண்ணா வீட்டிலேயே தங்க வச்சிக்களாமே

சக்தி : இல்ல சார் எங்க வீட்டுக்கு இப்பல்லாம் அடிக்கடி மருது வந்துட்டு போய்கிட்டு இருக்காரு....அதுவும் இல்லாம அக்கா முன்னாடி மாதிரி எந்த விஷயத்தையும் என்கிட்ட பேசுறது இல்ல....எதுக்கெடுத்தாலும் இன்னும் கொஞ்ச நாளில் நாங்க lollipop வீட்டை காலி பண்ணிடுவோம்ன்னு  சொல்லுது.....அதனால அதையெல்லாம் நம்பி இப்போதைக்கு நம்ம வீட்டுல தங்க வைக்க முடியாது..மாணிக்கம் அண்ணாவும் பாவம் அவர் எங்களுக்காக எவ்வளவோ செஞ்சிட்டாரு.....அதான் இவங்க ரெண்டு பேர இந்த அஸ்ரமத்தில் சேர்த்து விட நீங்க உதவி பண்ணா நல்லா இருக்கும்...இந்த ஒரு மாசம் மட்டும் நீங்க பணம் கட்டிட்டா போதும்..அக்கா கூடிய சீக்கிரம் எதோ buisness பண்ண போறேன்னு சொல்லுச்சு அதுக்கப்பறம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்....

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now