2 யாரவள்?
தனது மொபைல் கம்பெனியின் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருந்ததால், அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு செல்ல தயாரானான் மாமல்லன். வியாபார உலகத்தை பொறுத்தவரை, அவன் இந்த ஒரு நிகழ்ச்சிக்காக தான் மதுரை வந்திருப்பதாய் அனைவரும் நம்பினார்கள். ஆனால் யாருக்கும் தெரியாத, பரஞ்சோதிக்கு மட்டுமே தெரிந்த ஒரு காரணம் இருந்தது.
அது அவன் வாழ்வின் மிக முக்கியமான நாள்... கடந்த சில ஆண்டுகளாய் அவன் ஒருபோதும் தவற விட்டு விடாத ஒரு நாள்... அவனது அம்மாவின் பிறந்த நாள். ஒவ்வொரு வருடமும் அந்த குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு செல்வதை அவன் வழக்கமாய் கொண்டிருந்தான். அவனது அம்மா உயிரோடு இருந்தவரை, தவறாமல் அந்த கோவிலுக்கு செல்வார். உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அந்த குறிப்பிட்ட நாளில் அவன் மதுரை வருவது தவறியதில்லை. அதனால் தான், ஐரோப்பாவில் இருந்து அவன் அவசரமாய் இந்தியா திரும்பினான்.
தங்களது நிகழ்ச்சி நிரல்களை உள்ளடக்கிய கோப்புடன் அங்கு வந்தான் பரஞ்சோதி.
"நீ ரெடியா மல்லா?"
"நான் ரெடி. கிளம்பலாமா?"
அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். அவர்களுடைய குழுவை சேர்ந்தவர்கள் ஏற்கனவே வேலையை தொடங்கி விட்டிருந்தார்கள். ஹோட்டலுக்கு வரும் முன், பரஞ்சோதியை கோவிலுக்கு சென்று, அங்கு சில ஏற்பாடுகளை செய்து விட்டு வருமாறு பணித்தான் மாமல்லன்.
"நீ கோவிலுக்கு போயிட்டு இன்னும் வேற ஏதாவது செய்யணும்னு கேட்டுட்டு வந்து, எங்க கூட ஜாயின் பண்ணிக்கோ"
"ஆமாம் மல்லா, எனக்கும் நம்ம கோவில்ல, முக்கியமான ஒரு வேண்டுதல் இருக்கு"
"என்ன வேண்டுதல்?"
"ஒரு ஸ்பெஷல் பூஜை அரேஞ்ச் பண்ணலாம்னு இருக்கேன்... உனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னு"
YOU ARE READING
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
General Fictionவாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள்...