51 இறுதி பகுதி
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு
எம் கே அலுவலகம்
மாமல்லனின் அடுத்த கான்ஃபரன்ஸ்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தாள் இளந்தென்றல். அவளிடம் விரைந்து வந்த பரஞ்ஜோதி, அந்த கான்ஃபரன்ஸுக்கான விவரங்களை அவளிடம் கொடுத்து விட்டு சென்றான். ஏனென்றால் கான்ஃபரன்ஸுக்கு
ஒரு மணி நேரம் மட்டுமே இருந்தது.தன் அறைக்கு பக்கத்திலிருந்த இளந்தென்றலின் அறைக்கு வந்த மாமல்லன்,
"நீ ரெடியா தென்றல்?" என்றான்.
"எஸ் பாஸ்" என்ற அவளை முறைப்புடன் பார்த்த மாமல்லன்,
"கிளம்பு" என்றான்.
அவர்கள் கான்ஃபரன்ஸ் ஹாலை நோக்கி நடந்தார்கள். சட்டென்று தான் அணிந்திருந்த கோட்டு பின்னால் இழுக்கப்படுவதை உணர்ந்தான் மாமல்லன். பின்னால் திரும்பிப் பார்த்த அவன், இளந்தென்றல் அவனது கோட்டை பற்றி கொண்டு, தள்ளாடுவதை பார்த்தான். அவன் பதறினான் என்று கூறத் தேவையில்லை. தன் சுயநினைவை இழந்து கீழே போன இளந்தென்றலை லாவகமாய் பற்றிக் கொண்டான் மாமல்லன்.
"தென்றல்... கண்ணை திற தென்றல்... உனக்கு என்ன ஆச்சு? என்னை பாரு" அவள் கன்னத்தை தட்டினான்.
அவளை தன் கையில் அள்ளிக் கொண்டு தன் அறையை நோக்கி ஓடினான். உடனடியாய் தன் அம்மாவுக்கு ஃபோன் செய்தான் பரஞ்ஜோதி. அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தான் மாமல்லன். தன் தலையைப் பிடித்தபடி மெல்ல கண்விழித்தாள் இளந்தென்றல்.
"என்ன ஆச்சு தென்றல்?"
ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள். கான்ஃபரன்சை ரத்து செய்துவிட்டு, அவளை ஓய்வு எடுக்க விட்டு, அவளுடன் அமர்ந்து கொண்டான் மாமல்லன்.
சிறிது நேரத்தில், பரஞ்சோதியுடன் அங்கு வந்து சேர்ந்தார் சாரா. இளந்தென்றலை பரிசோதித்த அவர்,
"பயப்பட ஒண்ணும் இல்ல. நல்லா சாப்பிட்டுட்டு, ரெஸ்ட் எடுத்து, ரெகுலரா செக்கப்புக்கு வரணும். அவ்வளவு தான்" என்றார்
YOU ARE READING
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
General Fictionவாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள்...