9 மனம் உடைந்த மாமல்லன்

958 60 6
                                    

9 மனம் உடைந்த மாமல்லன்

நிம்மதி இழந்து காணப்பட்டான் பரஞ்ஜோதி. ஏற்கனவே மாலையாகி விட்டிருந்தது. காலையில் பரஞ்சோதி அழைத்த போது, அவனுடைய அழைப்பை ஏற்கவில்லை மாமல்லன். அதன் பிறகு, அவனுடைய கைபேசி ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. ஒருவேளை மாமல்லனுக்கு, இளந்தென்றலை பற்றிய உண்மை தெரிந்து விட்டிருக்கலாம் என்று அவனது மனம் அவனை எச்சரித்தது. மதுரை மாநகர் முழுவதும் மாமல்லனை தேடி அலைந்தான் பரஞ்சோதி. இறுதியில், மாமல்லனது இருப்பிடத்தை, அவனது கைபேசியின் ஐஎம்இஐ எண்ணை வைத்து தான் அவனால் கண்டுபிடிக்க முடிந்தது. மதுரையில் இருந்து கிட்டத்தட்ட ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்த அந்த இடத்தை நோக்கி விரைந்தான் பரஞ்சோதி.

ஒரே ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள எண்ணினான் பரஞ்சோதி. தென்றலுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்ட உண்மை தெரிந்த பிறகும் கூட, தென்றல் தனக்கு வேண்டும் என்று நினைக்கிறானா மாமல்லன் என்பது தான் அது. ஒருவேளை, ஆம் என்றால், அவன் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது.

மாமல்லன் இருந்த இடத்தை பரஞ்சோதி வந்தடைந்த போது, அவனது இதயத்தை யாரோ அழுத்தி பிழிவது போல் இருந்தது அவனுக்கு. தன் கால்களை கட்டிக்கொண்டு, கால்களுகிடையில் முகத்தை புதைத்த படி  சாலையோரத்தில் அமர்ந்திருந்தான் மாமல்லன்.

எவ்வளவு பெரிய பணக்காரன்... வியாபார உலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவன்... அப்படிப்பட்ட மாமல்லன், ஒன்றுமே செய்ய இயலா நிலையில், சாலையில் அமர்ந்திருக்கிறான்.

அவனிடம் நெருங்கவே பயந்தான் பரஞ்சோதி. ஏனென்றால், இதுவரை அவன் எதிர்கொள்ளாத சூழ்நிலை இது. மாமல்லனை எப்படி கையாள்வது என்றே புரியவில்லை அவனுக்கு. ஒன்றும் புரியாமல் தூரத்தில் நின்றபடி, வேதனையுடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தான் பரஞ்சோதி. அப்பொழுது மாமல்லனே தரையில் இருந்து எழுந்து நிற்பதை கவனித்தான். தனது கோபத்தை எல்லாம் வெளியேற்றும் வண்ணம், உறிமியபடி தனது கார் போனட்டை ஓங்கி குத்தினான் மாமல்லன். அந்த உறுமல், அவனது கோபத்தை வெளியேற்ற உதவியதா? நிச்சயம் இல்லை...!

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Tahanan ng mga kuwento. Tumuklas ngayon