42 ஷீலாவா...?

809 58 11
                                    

42 ஷீலாவா...?

வடிவாம்பாள் பாட்டியும், கோதையும் திருமணத்திற்கு செய்ய வேண்டிய சடங்குகளை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, மாமல்லனுக்கென்று சடங்குகளை செய்ய யாரும் இல்லை என்ற பேச்சு எழுந்தது.

"காதம்பரி உயிரோட இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்...! இந்த கல்யாணம் நடக்கணும்னு அவ மனசார ஆசைப்பட்டா. அவ இந்த உலகத்துல இல்லங்கிறதை என்னால நம்பவே முடியல மா" என்று வருத்தப்பட்டார் கோதை.

"நீ சொல்றது உண்மை தான். நான் கூட, அவ நம்ம பிள்ளையோட வாழ்க்கையை கெடுத்துட்டான்னு ரொம்ப கோபப்பட்டேன். ஆனா, உண்மையிலேயே அவ ஒரு நல்ல ஆத்மா" என்றார் வடிவாம்பாள்.

"மாமல்லனுக்கு யாருமே இல்லையே, பேசாம அவருக்கு செய்ய வேண்டிய சடங்கையும் நம்மளே செஞ்சிட்டா என்ன?"

"நானும் அதைத்தான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன். நம்மளே செஞ்சிடலாம். அந்த பிள்ளைக்கும் மனசுக்கு நிறைவாய் இருக்கும்"

"சரிங்கம்மா. கோவிலுக்கு எடுத்துக்கிட்டு போக, வேண்டிய பொருளை எல்லாம் எடுத்து நான் பையில வைக்கிறேன். சாயங்காலம்  மாமல்லனை இங்க வரச் சொல்லி பேசிடலாம்"

"என்ன்னனது? அப்படின்னா, நீயும்  எங்க கூட கோவிலுக்கு வரணும்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா?"

"அப்படின்னா, கோவிலுக்கு நான் வர வேண்டாமா?"

"நீ இப்படி எல்லாம் சுத்திக்கிட்டு இருக்கிறது நல்லதில்ல. தென்றலோட கல்யாண நேரத்துல, உனக்கு உடம்புக்கு ஏதாவது ஆனா என்ன செய்றது? எல்லாருக்கும் மனசு கஷ்டம் தானே?"

"நீங்க சொல்றதும் சரி தான். நான் வீட்டிலேயே இருக்கேன்"

"நீ படுத்து ரெஸ்ட் எடு. நாங்க கோவிலுக்கு போயிட்டு சீக்கிரம் வந்துடுறோம்"

அவர்களின் பேச்சைக் கேட்டபடி முழுவதும் தயாரான நிலையில் அங்கு வந்த இளந்தென்றல்,

"ஆமாம்மா. நாங்க சீக்கிரம் வந்துடுறோம். நீங்க ரெஸ்ட் எடுங்க" என்றாள்.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now