43 எங்கே இருந்தாய்?

755 59 13
                                    

43 எங்கே இருந்தாய்?

இளந்தென்றலையும், பாட்டியையும் வீட்டில் கொண்டு வந்து விட்டான் பரஞ்சோதி. அந்த வீட்டின் சுற்றுப்புறத்தை அவன் கண்கள் துழாவின. அந்த வீட்டின் வலது மூலையிலிருந்து அவனை நோக்கி கையசைத்தான் தமிழ். அவனை பார்த்து லேசாய் தலையசைத்தான் பரஞ்சோதி.

அப்பொழுது அவர்கள் வீட்டின் உள்ளே இருந்து வந்த ஒரு பெண், இளந்தென்றலின் கண்களை பின்னால் இருந்து பொத்துவதை பார்த்தான் பரஞ்சோதி. அவளது கைகளை தடவிப் பார்த்த இளந்தென்றல்,

"காவியா" என்றாள்.

அவள் கண்களில் இருந்து தன் கைகளை எடுத்த காவியா, இளந்தென்றலை அனைத்துக் கொண்டு,

"எப்போ வந்த?" என்றாள்.

"நேத்து வந்தேன்"

"நேத்து வந்தவளுக்கு எனக்கு போன் பண்ணனும்னு கூட தோணலையா...? உனக்கு கல்யாணமாமே..."

"சாரிப்பா"

"என்னை மறந்துட்டியா?"

"உன்னை எப்படி மறக்கிறது? இப்போதிலிருந்து நீ தானே என் கூட இருக்க போற..."

காவியாவை சந்தேக கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தான் பரஞ்ஜோதி. இந்நாளில், யாரைப் பார்த்தாலும் சந்தேகமாக இருக்கிறது அவனுக்கு. 

"பரஞ்சோதி அண்ணா, உள்ள வாங்களேன்" என்றாள் இளந்தென்றல்.

"இல்ல தென்றல். முக்கியமான வேலை இருக்கு. நான் போகணும்"

சரி என்று தலையசைத்தாள் இளந்தென்றல். காவியாவை நோட்டமிட்டபடி அங்கிருந்து சென்றான் பரஞ்சோதி. தனக்காக தமிழ் காத்திருந்த இடத்தில் அவன் வண்டியை நிறுத்த, காரில் ஏறிக்கொண்டான் தமிழ்.

"சார் நீங்க சொன்ன அதே பொம்பளை தான் அவ. நம்ம இப்ப என்ன சார் செய்ய போறோம்? எப்படி அந்த பொம்பளையை டிரேஸ் பண்ண போறோம்?"

"தன்னோட ஃபோன் நம்பரை அவ மாத்திட்டா. அதுல பெருசா ஆச்சரியப்பட ஒண்ணும் இல்ல. நான் இதைப் பத்தி மல்லன் கிட்ட பேசிட்டு சொல்றேன்"

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now