11 புது இடம்
இளந்தென்றலை சந்தித்த பிறகு, வீடு திரும்பும் எண்ணமே இல்லை மாமல்லனுக்கு. ஒரு சின்னப் பெண்... தனக்கென்று சில சட்ட திட்டங்களை வகுத்துக் கொண்டு, அவளுடைய நற்குணங்களால் அவனைக் கொன்று கொண்டிருக்கிறாள். அவனுக்கு மூச்சு முட்டியது. என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். ஒரு பெண் எப்படி இவ்வளவு பிடிவாதமாய் இருக்க முடியும்? பணத்திற்காகவும், வசதி வாய்ப்புகளுக்காகவும் அசைந்து கொடுக்காத ஒரு பெண் இருக்க முடியுமா? அவளது மனதை எப்படித்தான் தன் பக்கம் திருப்புவது? புரியவில்லை அவனுக்கு.
அவளை சந்திக்கும் வரை, அவன் விரும்பியது இதைத்தான்... அவன் தேடிக் கொண்டிருந்ததும் இதைத்தான்... எதற்காகவும் உறவை விட்டுக் கொடுக்காத ஒரு பெண்ணைத் தான் அவன் விரும்பினான். அப்படிப்பட்ட பெண் அவன் முன் வந்துவிட்டபோது, அவனால் அதை தாங்க முடியவில்லை. ஏனென்றால், அவள் பிடிவாதம் பிடிப்பது அவனுக்காக அல்ல... வேறு யாருக்காகவோ. அது தான் அவன் உயிரை வாங்கியது. எப்படியாவது அந்த பிடிவாதத்தை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினான் அவன்.
மாமல்லனுக்காக காத்திருந்தான் பரஞ்சோதி. மாமல்லனுக்கும், இளந்தென்றலுக்கும் இடையில் நடந்து கொண்டிருப்பது என்ன என்பது அவனுக்கு தெரியும். இளந்தென்றல், மாமல்லனின் காதலை தவிர்த்து விட்ட விஷயமும் அவனுக்கு தெரியும். என்ன பெண் இவள்? கடைசி வரை அவள் இப்படியே பிடிவாதமாய் இருந்துவிட்டால் என்னாவது? அவளுக்கு பணத்தின் மீது விருப்பம் இல்லாவிட்டால், எதை வைத்து அவளை மாமல்லனை ஏற்றுக்கொள்ள செய்வது? என்று யோசித்துக் கொண்டிருந்தான் பரஞ்சோதி.
அப்பொழுது, மாமல்லன் வீட்டுக்குள் நுழைவதை தன் அறையிலிருந்து பார்த்தான் பரஞ்சோதி. மாமல்லனின் முகத்தை பார்க்கும் போதே அவனுக்கு புரிந்தது, அவன் மிக மோசமான மனநிலையில் இருக்கிறான் என்பது. அவனது முகத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.
YOU ARE READING
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
Všeobecná beletriaவாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள்...