26 உனக்கு என்ன ஆனது?
ஒரு கான்ஃபரன்ஸை முடித்துக் கொண்டு வீடு திரும்பினான் மாமல்லன். வீட்டிற்கு வந்தவுடன், அவனது கண்கள், அவன் மனதிற்கு பிடித்த அந்த நபரை தேடி, வழக்கம் போல் துழாவ தொடங்கின. அவள் ஏன் வரவேற்பறையில் இல்லை? அவளால் நான்கு சுவர்களுக்குள் அடைந்து, அமர முடியாதே...! இங்கும் அங்கும் அலைந்து திரியாவிட்டால், அவளது உலகம் சுழற்சியை நிறுத்தி விடுமே...! என்று யோசித்தபடி, தன் அறைக்கு சென்றான் மாமல்லன். விரைவாய் முகம் கை கால் கழுவிக்கொண்டு மீண்டும் வெளியே வந்தான். அப்பொழுதும் இளந்தென்றலை அங்கு காணவில்லை.
சாப்பிடுவதற்காக உணவு மேஜைக்கு வந்து அமர்ந்தான். அந்த உணவு தந்த வாசம் கூறியது, அது இளந்தென்றலின் கை பக்குவம் அல்ல என்று. அவள் இன்று சமைக்கவில்லையா? ஏன்?
"தென்றல் எங்க?" என்றான் இசக்கியிடம்.
"அவங்க ரூம்ல இருக்காங்க. அவங்களுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல"
அதைக் கேட்டு அதிர்ந்த மாமல்லன்,
"என்னது? உடம்பு சரியில்லையா? எதுக்காக என்கிட்ட இதை நீங்க முன்னாடியே சொல்லல? அவ ஏதாவது சாப்பிட்டாளா, இல்லையா?"
"இல்ல தம்பி... எதுவும் வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க. ஜூஸ் மட்டும் தான் குடிச்சாங்க"
"எதுக்காக நீங்க எனக்கு ஃபோன் பண்ணி சொல்லல? என்ன ஆச்சு அவளுக்குன்னு இப்பயாவது சொல்றீங்களா?"
"வயித்து வலின்னு சொன்னாங்க"
நாலு கால் பாய்ச்சலில், இளந்தென்றலின் அறையை நோக்கி ஓடினான் மாமல்லன். அவளது அறையின் கதவு, அரைவாசி திறந்த நிலையில் விடப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்த மாமல்லனின் கால்கள், அவளை பார்த்தவுடன் நகர மறுத்தன. தன் வயிற்றை இறுக்கி பிடித்தபடி, இறாலை போல் சுருண்டு படுத்திருந்தாள் இளந்தென்றல். அவளது பலவீனமான நிலை, மாமல்லனை உலுக்கிவிட்டது. அவளை நோக்கி விரைந்த அவன், அவளது வெளுத்த முகத்தையும், அழுது சிவந்த கண்களையும், வறண்ட உதடுகளையும் பார்த்து நிலைகுலைந்து போனான். ஒரு காலை கட்டிலில் முழங்கால் இட்டு ஊன்றி, அவளை தூக்கி தன் மீது சாய்த்து கொண்டு,
YOU ARE READING
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
General Fictionவாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள்...