5 நாம் சந்தித்து விட்டோம்...
இளந்தென்றலை நோக்கிச் சென்ற மாமல்லன்,
"உங்களுக்கு ஆட்சேபனை இல்லனா, நான் உங்களை ட்ராப் பண்றேன்" என்றான் எந்த தயக்கமும் இன்றி.
இளந்தென்றல் அவனை மறுத்து பேசும் முன், அவளுடன் இருந்த சிறுவன் ஆர்வமாய் கேட்டான்,
"நீங்க நிஜமாவே உங்க கார்ல எங்களை கூட்டிகிட்டு போவீங்களா?"
ஆமாம் என்று புன்னகைத்தான் மாமல்லன்.
"அக்கா, அக்கா, வேண்டாம்னு சொல்லிடாதீங்க அக்கா... வாங்க அக்கா போகலாம்..."
"நம்ம பஸ்ல போகலாம் முன்னா"
"இந்த நேரத்துல பஸ்ஸே வராது கா... வந்தாலும் செம கூட்டமாக இருக்கும். அதான் அவர் நம்மளை விடுறேன்னு சொல்றாரு இல்ல... வாங்க கா" என்று அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.
முந்தைய முறை, அவன் அவளை பார்த்த அதே இடத்திற்கு தான் அவள் செல்கிறாளா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் மாமல்லனுக்கு. அவர்கள் இருவரும் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள். வண்டியை இயக்கினான் மாமல்லன். அவனை, தன்னிடம் நோக்கி வழிநடத்தினாள் இளந்தென்றல். அவன் அவளைப் பார்த்த அதே இடத்தை நோக்கி அவள் அழைத்துச் சென்றது, அவனுக்கு சந்தோஷத்தை அளித்தது. அதை நிச்சயப்படுத்திக் கொண்ட பின் மெல்ல பேச்சை துவங்கினான்.
"அன்னைக்கு ஹாஸ்பிடல்ல இருந்து எப்போ கிளம்பி போன? நல்லபடியா வீடு போய் சேந்துட்ட இல்ல? ஒன்னும் பிரச்சனை இல்லையே?" என்றான் ரியர்வியூ கண்ணாடி மூலம் அவளை பார்த்தபடி.
"ம்ம்ம்... என்னை ஏன் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனீங்க? தண்ணி தெளிச்சு எழுப்ப முயற்சி செஞ்சிருக்கலாமே"
அவளை வினோதமாய் பார்த்தான் மாமல்லன், தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சிக்காமல் கூட யாராவது மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்களா என்பது போல.
"எல்லா முயற்சியும் செஞ்சு பார்த்துட்டு, ஒன்னும் வேலைக்கு ஆகலைன்னு தெரிஞ்ச பிறகு தான், உன்னை ஹாஸ்பிடலுக்கு தூக்கிகிட்டு போனேன்"
YOU ARE READING
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
General Fictionவாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள்...