25 எதிர்பாராத சுவாரசியம்
சிறிது நேரத்திற்கு பிறகு /
எம் கே அலுவலகம்அலுவலகத்தில் அமர்ந்திருந்த பரஞ்சோதிக்கு மாமல்லனிடம் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை உடனே ஏற்றான் பரஞ்ஜோதி.
"சொல்லு மல்லா..."
"ஷீலா, அவ புத்தியை காட்டிட்டா. இளந்தென்றல் என் வீட்டில் இருக்கிற விஷயத்தை, அவ தான் பாட்டிக்கு ஃபோன் பண்ணி சொல்லி இருக்கா"
"அப்படியா? உனக்கு எப்படி தெரியும்?"
"பாட்டியே என்கிட்ட சொன்னாங்க. யாரோ ஒரு பொண்ணு தான் அவங்களுக்கு போன் பண்ணி சொன்னாளாம்"
"பாட்டி ஆசிரமத்தில் இருக்கிற விஷயம் ஷீலா ஒருத்திக்கு தான் தெரியும்"
"அது மட்டும் இல்ல... இளந்தென்றல் என் வீட்டில் இருக்கிற விஷயமும் அவளுக்கு மட்டும் தான் தெரியும்..."
"இப்போ நான் என்ன செய்யணும்?"
"அவளை வேலையை விட்டு அனுப்பிடு"
"டன்..."
அழைப்பை துண்டித்தான் பரஞ்ஜோதி.
மல்லையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், கரை கடந்து சென்றது ஷீலாவிற்கு. விஷயத்தை பாட்டியிடம் பற்றவைத்த பிறகு, இளந்தென்றலுக்கு எதிராய், மிகப்பெரிய நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருந்தாள் அவள். அவள் மல்லையில் கால் வைப்பதை கூட விரும்பாத மாமல்லன், இளந்தென்றலை மட்டும் அங்கு அமர வைத்து சீராட்டிக் கொண்டிருக்கிறான். எவ்வளவு பெரிய முட்டாள் அவன்...!
*இப்போ நீ என்ன செய்றான்னு பாக்குறேன், மாமல்லா... உன்னோட பாட்டி எந்த அளவுக்கு *பழமை விரும்பின்னு* எனக்கு நல்லா தெரியும். என்ன சொல்லி நீ அவங்களை சமாதான படுத்துறேன்னு நான் பாக்குறேன். அந்த நாட்டுப்புறத்து பொண்ண, நிச்சயம் அவங்க கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ள போறாங்க* என்று மனதிற்குள் என்னை சிலாகித்தாள் ஷீலா.
தனது கற்பனை உலகத்தில் பாடித்திரிந்தாள் ஷீலா. முழுமையாய் அவள் அதில் லயித்திருந்ததால், அங்கு வந்த பரஞ்சோதியை அவள் கவனிக்கவில்லை. அவனைப் பார்த்தவுடன், நிமிர்ந்து அமர்ந்து, வேலையில் மும்முரமாய் இருப்பது போல் பாசாங்கு செய்தாள் அவள்.
JE LEEST
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
Algemene fictieவாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள்...