31 என்ன செய்து விட்டாள்?
மாமல்லன் காரை விட்டு கீழே இறங்குவதற்கு முன், காரை விட்டு கீழே இறங்கி, வீட்டிற்குள் ஓடினாள் இளந்தென்றல். தனது அறைக்கு சென்று, கதவை தாழிட்டுக் கொண்ட அவள், அன்று முழுவதும் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. மாமல்லன் அவளை மல்லைக்கு அழைத்து வந்த முதல் நாள் அன்று, அவள் எவ்வளவு தெளிவாய் அறையை விட்டு வெளியே வந்தாளோ, அது போலவே, இந்த முறையும் நடக்க வேண்டும் என்று விரும்பினான் மாமல்லன். அவளுக்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்திலிருந்து அவள் வெளியே வந்தால் போதும் என்று எண்ணினான் அவன். அதை எப்படி செயல்படுத்துவது என்று தான் அவனுக்கு புரியவில்லை. உண்மையை கூறப்போனால், அவளிடம் நெருங்கும் தைரியமே அவனுக்கு இல்லாமல் போனது.
தன் வாழ்வில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை எண்ணிய படி, தன் அறையில் அமர்ந்திருந்தான் மாமல்லன். இளந்தென்றலை அவனது வீட்டிற்கு அழைத்து வந்தது மட்டும் தான் அவன் செய்தது. அதற்கு பின் நடந்த எதுவும் அவன் கையில் இல்லை.
இளந்தென்றல் அவனது மனைவியாகி விட்டாள் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. அவனது முகத்தில் துளிர்த்த புன்னகை, அடுத்த நொடியே மாயமாய் மறைந்தது. அவள் அவனுக்கு மனைவியானது, அவளது விருப்பத்துடன் நடக்கவில்லை அல்லவா? சூழ்நிலையின் கட்டாயத்தின் பேரில் அது நடந்து முடிந்தது. அவன் வேறு என்ன செய்ய முடியும்? நிச்சயம் அவள் ராக்கி கட்டுவதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு பதில் எதை வேண்டுமானாலும் எதிர்கொள்ள அவன் தயார்.
மறுப்புறம், இளந்தென்றலோ அழுது அழுது களைத்திருந்தாள். நடந்ததை யாராலும் மாற்ற முடியாது என்ற எதார்த்தம் அவளை தாக்கியது. தன் உருவத்தை கண்ணாடியில் கண்ட அவளுக்கு, அவள் புதிதாய் தெரிந்தாள். இப்போது அவள் ஒருவருக்கு மனைவி. அவள் கழுத்தில் இருக்கும் மாங்கல்யமும், நெற்றியில் இருக்கும் குங்குமமும் விளையாட்டு பொருட்கள் அல்ல. அது மாமல்லனின் பெயரை உள்ளடக்கியவை. இரண்டு ஆன்மாவின் சங்கமம். அவள் கழுத்தில் இருந்த மாங்கல்யம் உண்மையை உரக்கச் சொல்லி, மின்னியது.
YOU ARE READING
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
General Fictionவாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள்...