6 மீண்டும் வந்த அழைப்பு
தனக்கு அனுப்பப்பட்டிருந்த குறுஞ்செய்தியை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தான் ஓவியன். அந்த செய்தியை அனுப்பியது கொலைகாரன் தான் என்பதில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவன் இந்த வழக்கில் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது அவனுக்கு எப்படி தெரியும்? கொலைகாரன் அவனை *ட்ராக்* செய்கிறானோ? ஏதோ ஒரு பிரைவேட் நம்பரிலிருந்து செய்தி அனுப்பி இருக்கிறான். அவன் எங்கிருக்கிறான்? பிரின்ஸ் இங்கு வந்து சேர்ந்தால் தான் இது அனைத்திற்கும் அவனுக்கு பதில் கிடைக்கும். கைபேசியை சோபாவின் மீது வீசிவிட்டு மீண்டும் சமையலறைக்கு சென்றான்.
......
தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முருகன், ஜி எம் மருத்துவமனையை கடந்த பொழுது, ஓவியன் அதற்குள் செல்வதை பார்த்து, அவனது கால்கள் அனிச்சையாய் பிரேக்கை அழுத்தின. இவர் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்? ஒருவேளை வழக்கு சம்பந்தமாய் இங்கு வந்திருப்பாரோ? *யூ டர்ன்* எடுத்து, ஓவியனை பின்தொடர்ந்த முருகன், வரவேற்பில் ஓவியனை பற்றி விசாரித்தான்.
"அசிஸ்டன்ட் கமிஷனர் ஓவியன் சார் இங்க எதுக்காக வந்திருக்காரு? அவரு ஏதாவது கேசை டீல் பண்ணிக்கிட்டு இருக்காரா?"
"அவரோட அக்கா இங்க அட்மிட் ஆகி இருக்காங்க சார்"
"அக்காவா? அவங்களுக்கு என்ன ஆச்சு?"
"அவங்க கோமாவில் இருக்காங்க"
"கோமாவா? அவங்களுக்கு என்ன நடந்துச்சு?"
"எனக்கு அதைப் பத்தி எதுவும் தெரியாது சார். வேணும்னா நீங்க டாக்டரை கேட்டு தெரிஞ்சுக்கோங்க"
"எவ்வளவு நாளா அவங்க இங்க இருக்காங்க?"
"மூணு மாசமா இங்க அட்மிட் ஆகி இருக்காங்க"
"என்ன கண்டிஷன்?"
"எந்த இம்ப்ரூவ்மெண்ட்டும் இல்ல சார்"
மேலும் ஏதோ கேட்கப் போனவன், படி இறங்கி வந்து கொண்டிருந்த ஓவியனை பார்த்து, அங்கிருந்து அவசரமாய் அகன்றான். ஓவியன் வெளியே வரும் வரை காத்திருந்த அவன், அவன் ஜிப்பில் ஏறும் முன், அவனுக்கு முன்னால் வந்து நின்றான்.
![](https://img.wattpad.com/cover/327480651-288-k177768.jpg)
YOU ARE READING
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️
Mystery / Thrillerமுறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொ...