13 என்ன நடந்தது?
தூரிகையுடன் மருத்துவமனையை வந்தடைந்தான் ஓவியன். அவனது அக்கா அனுமதிக்கப்பட்டிருந்த அவசர சிகிச்சை பிரிவை நோக்கி சென்றான். அவனுக்காக மருத்துவர் அங்கு காத்திருந்தார்.
"என்னாச்சு டாக்டர்?"
"பேபியோட பொசிஷன்ல காம்ப்ளிகேஷன் இருக்கு. குழந்தையோட கழுத்தை நச்சுக்கொடி சுத்தியிருக்கு"
"இப்போ என்ன செய்யலாம் டாக்டர்?"
"இம்மிடியேட்டா ஆப்பரேஷன் பண்ணியாகணும். அப்போ தான் குழந்தையை காப்பாத்த முடியும்"
"அப்படின்னா அக்கா?"
"இப்போதைக்கு அதைப்பத்தி எதுவும் சொல்ல முடியாது. அவங்க கோமாவுல இருக்கிறதால, எப்படி இருந்தாலும் ஆபரேஷன் தான் பண்ண வேண்டி இருக்கும்ன்னு நான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லி இருந்தேனே"
"சரிங்க டாக்டர். செஞ்சிடுங்க"
"நீங்க ஃபார்ம்ஸ்ல ஸைன் பண்ணிட்டா ஆரம்பிச்சுடலாம்"
தேவைப்பட்ட இடங்களில் கையெழுத்திட்டு விட்டு, அறுவை சிகிச்சை பிரிவின் வெளியில் அமர்ந்தான் ஓவியன். அவன் அருகில் வந்தமர்ந்த தூரிகை,
"கவலைப்படாதீங்க. அவங்களுக்கு ஒன்னும் ஆகாது" என்றாள்
"அவங்களுக்கு சரியாக வாய்ப்பே இல்ல"
"ஏன் இப்படி விரக்தியா பேசுறீங்க?"
"யாரும் கற்பனை பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு அவங்க உடைஞ்சு போயிருக்காங்க. அவங்களுக்கு குணமானா கூட, அதிலிருந்து அவங்களால வெளியில வர முடியாது"
"அவங்களுக்கு என்ன நடந்துச்சு?"
"துரோகம். அவங்களோடது லவ் மேரேஜ். உலகத்திலேயே தான் ரொம்ப பெரிய அதிர்ஷ்டசாலின்னு நினைச்சுக்கிட்டு இருந்தாங்க. பைத்தியக்காரத்தனமா அவங்க புருஷனை காதலிச்சாங்க. ஒவ்வொரு நொடியையும் அனுபவிச்சு வாழ்ந்தாங்க. அவங்க புருஷனோட பைக் சத்தம் கேட்டா, சின்ன குழந்தை மாதிரி துள்ளி குதிச்சு எழுந்து வெளிய ஓடுவாங்க. நல்ல புருஷனை தனக்கு கொடுத்ததுக்காக, கடவுளுக்கு நன்றி சொல்ல மட்டுமே கோவிலுக்கு போனவங்க அவங்க. தனக்காக அவங்க எப்பவும் சாமி கும்பிட்டதே இல்ல. அவங்க புருஷனுக்காக சாமி கும்பிட ஒரு நாள் கூட தவறினதே இல்ல. ஆனா, அவங்க புருஷன் அவங்களை மாதிரி இல்ல. அந்த ஆளோட வாழ்க்கையில, வேறொரு பொம்பளை இருந்தா. அது அவங்களுக்கு தெரிஞ்சப்போ, அவங்க நொறுங்கி போயிட்டாங்க. பொய் சொல்லி அவங்களை சமாதானப்படுத்தினான். அந்த பொம்பளையை விட்டுட்டேன்னு சொல்லி நம்ப வச்சான். ஆனா, அப்படி செய்யல. எங்க அக்கா முழுசா அவங்க நம்பிக்கையை இழந்தப்போ, தற்கொலை பண்ணிக்கனும்னு முடிவுக்கு வந்தாங்க. தெரிஞ்சே காரை கொண்டு போய் மரத்துல மோதினாங்க. ஆனா விதியோட கணக்கு வேற மாதிரி இருந்தது. அவங்க கோமாவுக்கு போயிட்டாங்க. அந்த ஆக்சிடென்ட் நடக்கும் போது, அவங்க அஞ்சு மாச குழந்தையோட பிரக்னண்டா இருந்தாங்க"
![](https://img.wattpad.com/cover/327480651-288-k177768.jpg)
YOU ARE READING
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️
Mystery / Thrillerமுறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொ...