34 இறுதிப் பகுதி

1.1K 62 29
                                    

 36 இறுதிப் பகுதி

"குற்றவாளி எவ்வளவு தான் திறமைசாலியா இருந்தாலும், ஏதாவது ஒரு தடயத்தை தன்னை அறியாமல் விட்டுட்டு போவான். அதே மாதிரி தான் இங்கேயும்" புன்முறுவல் பூத்தான் ஓவியன்.

ஒன்றும் புரியாமல் விழித்தான் முருகன்.

"நான் கோழிக்கோட்டுக்கு போறேன்"

"எப்ப சார்?"

"கிளம்பிட்டேன்"

"நானும் வரலாமா சார்?

"தாராளமா"

விமான நிலையத்தை நோக்கி ஜிப்பை செலுத்த துவங்கினான் முருகன். தான் அறிந்த ஒரு டிராவல் ஏஜென்டின் மூலமாக பயண சீட்டுகளை ஏற்பாடு செய்தான் ஓவியன்.

அவர்கள் இருவரும் விமானத்தில் ஏறி அமர்ந்தார்கள்.

"நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா சார்?" என்றான் முருகன்

"கேளுங்க"

"எல்லா குற்றவாளிகளும் ஏதாவது ஒரு தடயத்தை விடுவாங்கன்னு சொன்னீங்க. எட்வின் அப்படி என்ன தடயத்தை சார் விட்டுட்டு போனான்?"

"கோழிக்கோடு"

"கோழிக்கோடா? அதுல என்ன சார் தடயம் இருக்கு?"

"என்னுடைய யூகம் சரியா இருந்தா, எட்வின் இந்தியாவிலேயே இல்ல. அவன் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு போயிருக்கணும்"

"ஆனா, அவன் இந்தியாவில் இருக்கிற எல்லா சர்ச்சையும் விசிட் பண்ண போறதா சொன்னானே சார்?"

"எட்வின் சொல்றதெல்லாம் உண்மையா தான் இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லையே...! அவன் நம்மை திசை திருப்பி விட்டிருக்கான். கோழிக்கோடு ரொம்ப பெரிய சிட்டி கிடையாது. ஆனா அங்க இன்டர்நேஷனல் ஏர்போர்ட் இருக்கு. ரொம்ப சமீபத்துல தான் அந்த ஏர்போர்ட்டுக்கு இன்டர்நேஷனல் அந்தஸ்து கிடைச்சது. அதனால, யாரும் அவன் அங்கயிருந்து வெளிநாட்டுக்கு போயிருப்பான்னு எதிர்பார்க்க மாட்டாங்க. அதனால தான் அவன் அங்கிருந்து நமக்கு தைரியமா கால் பண்ணான். வெளிநாட்டுக்கு போறதுக்காக தான் அவன் தன்னோட வீட்டை வித்திருக்கணும். அகோரமூர்த்தியை கொல்றதுக்கு முன்னாடி, வேண்டிய டைம் எடுத்துக்கிட்டு அவன் அதை நிதானமா செஞ்சிருக்கான்"

ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️Dove le storie prendono vita. Scoprilo ora