33 தடயம்

743 55 9
                                    

33 தடயம்

அகோர மூர்த்தியின் மகன் ராஜா பைக்கை நிறுத்திவிட்டு, தன் கண்ணாடியை கழட்டியபடி கீழே இறங்கினான். அந்த வீட்டின் காவலாளி அவனை நோக்கி ஓடினார்.

"சின்னையா, இவர் தான் ஏசி"

"ஹலோ சார், ஐ அம் ராஜா" கைகுலுக்கலுக்காக சம்பிரதாயமாய் கை நீட்டினான். அவன் கையை பற்றிய ஓவியன்,

"ஐ அம் ஓவியன்" என்றான்.

"நீங்க என்னை எதுக்காக வர சொன்னிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா சார்?"

"உங்க அப்பா மிஸ்ஸிங்"

"அப்படியா?" என்றான் எந்த ஆர்வமும் இல்லாமல்.

"நாங்க அதை பத்தி விசாரிச்சுக்கிட்டு இருக்கோம். உங்க வீட்டை சோதனை போட்டா ஏதாவது க்ளு கிடைக்கும்னு நினைக்கிறேன்"

"ஆனா என்கிட்ட சாவி இல்ல சார். வேணும்னா நீங்க பூட்டை உடைச்சி பாருங்க"

" வேற வழி இல்லைனா நாங்க அதை இதான் செய்யப்போறோம். அதுக்காக தான் உங்களை வர சொன்னோம்"

"தாராளமா செய்யுங்க சார்"

ஓவியன் முருகனுக்கு ஜாடை கட்ட, அவன் காவலாளியிடம்,

"ஒரு சுத்தியல் கிடைக்குமா?" என்றான்.

"கார் ஷெட்டில் இருக்கு சார். இதோ கொண்டு வரேன்" கார் ஷெட்டை நோக்கி சென்றார் காவலாளி.

அவர் கொண்டு வந்த சுத்தியலை வைத்து கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தார்கள். எறும்புகள் அணிவகுத்து வந்த அந்த குறிப்பிட்ட அறையை நோக்கிச் சென்றான் ஓவியன். அந்த அறையின் கதவை அவன் மெல்ல தள்ளவும், அவனது கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. அவனை பின்தொடர்ந்து வந்த முருகன் உறைந்து நிற்க, அகோரமூர்த்தியின் மகன் ராஜா, அந்த காட்சியை காண முடியாமல் தன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

அரை நிர்வாணமாய் கிடந்த அகோரமூர்த்தியின் உயிரற்ற உடலை, கொத்து கொத்தான எறும்புகள் தின்று கொண்டிருந்தன. அவனது வாய், கை, கால்கள் இறுக்கமாய் கட்டப்பட்டிருந்தன. அவனது உடலுக்கு அருகில், ஒரு சாக்லேட் சிறப்பு டப்பா காலியாய் கிடந்தது. அதில் இருந்த சாக்லேட் சிரப், அவன் மீது கொட்டப்பட்டு இருக்க வேண்டும். அவனது உடல் கிட்டத்தட்ட ஒரு குலைந்து போயிருந்தது.

ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️Where stories live. Discover now