30 ஸ்திர முடிவு

662 53 8
                                    

30 ஸ்திர முடிவு

தனது வீட்டின் பால்கனியில் அமர்ந்திருந்த ஓவியன், அகோரமூர்த்தி தன் மனைவியிடம் நடந்து கொண்ட முறை பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். என்ன மனிதன் அவன்? எப்படி ஒரு மனிதனுக்கு இவ்வளவு அகங்காரமும், ஆணவமும் இருக்கிறது? குற்ற உணர்ச்சியில்லை, வருத்தமில்லை, துரோகம் செய்து விட்டோம் என்ற உறுத்தல் இல்லை... இந்த உலகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? சிறிது கூட உறுத்தலே இல்லாமல் துரோகம் செய்யும் அளவிற்கு மனிதர்கள் மாறிவிட்டார்களா? அவனது உண்மை முகம் தெரிந்த போது, அவனது மனைவியின் உள்ளம் எவ்வளவு குமுறி இருக்கும்?

நீண்ட மூச்சை இழுத்து விட்டு நிமிர்ந்தவன், தூரிகை தன்னை பார்த்தபடி நின்று இருப்பதை கண்டான்.

"ஏதாவது பிரச்சனையா?"

ஒன்றும் இல்லை என்று அவன் தலையசைக்க,

"உங்க முகத்தை பார்த்தா அப்படி தெரியலையே" என்றாள் தூரிகை.

"என் மூஞ்சே அப்படித்தான்" என்று வெட்டிச் சிரித்தான்.

"எல்லா நேரமும் அப்படி இல்ல... எப்போ நீங்க அப்செட்டா இருக்கீங்களோ அப்ப மட்டும் தான் உங்க முகம் இப்படி இருக்கும்..."

"இருக்கலாம்..."

"என்ன பிரச்சனைன்னு என்கிட்ட சொல்ல மாட்டீங்களா?"

அகோர மூர்த்தியின் கதையை அவளிடம் கூறினான்.

"பாவம் அவனோட வைஃப்"

தூரிகை ஒன்றும் கூறாமல் இருக்கவே,

"என்ன யோசிச்சிக்கிட்டு இருக்க?" என்று வினவினான்.

"பாவம், அவங்க புருஷனை ரொம்ப நம்பியிருக்காங்க... இதுக்கு அப்புறம் அவங்க என்ன செய்வாங்க? தன்னுடைய புருஷன் கிட்ட இருந்து பிரிஞ்சு போகணும் அப்படிங்கற தன்னோட முடிவுல அவங்க தீர்க்கமா இருப்பாங்கன்னு நினைக்கிறீங்களா?"

"அது எனக்கு தெரியல. ஆனா, அவங்க தன் முடிவை மாத்திக்க கூடாது"

"நம்மால அவங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாதா?"

"நிச்சயம் முடியும். ஆனால நம்ம செய்யக்கூடாது"

ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️Dove le storie prendono vita. Scoprilo ora