12 மாற்றம்
தன் மேஜையின் மீது இருந்த பேப்பர் வெயிட்டை உருட்டியபடி, இந்த வழக்கில் ஓவியன் எந்த விததில் சம்பந்தப் பட்டிருக்க கூடும் என்று யோசித்துக் கொண்டிருந்தான் முருகன். ஓவியனின் அக்கா, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருப்பாதாக ஜிஎம் மருத்துவமனையின் வரவேற்பளார் பெண் கூறினாள். ஆனால் ஓவியனோ தன் நண்பனை பார்க்க வந்ததாய் பொய் கூறினான். தன் அக்காவை பற்றி அவன் மறைக்க வேண்டிய காரணம் என்ன? மறைக்கும் அளவிற்கு அதில் என்ன இருக்கிறது? முருகனுக்கு ஓவியனின் அக்காவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகுந்தது. ஓவியனின் அக்காவை பற்றி தான் விசாரிப்பது ஓவியனுக்கு தெரிய வந்தால், அது நிச்சயம் ஓவியனுக்கு கோபத்தை உண்டாக்கும். ஆனால் விசாரிக்காமல் எப்படி தெரிந்து கொள்வது? ஓவியனை சந்தேகப்படுவது நல்லதா? அவன் அந்த விஷயத்தை மறைக்கிறான் என்றால், நிச்சயம் அதற்கு ஒரு நியாயமான காரணம் இருக்கும். முருகனுக்கு தெரிந்தவரையில், தனது பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடியவன் அல்ல ஓவியன். அது அவன் சொந்த விஷயமாக இருக்கும் வரையில், அதை மறைத்து வைக்க அவனுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால், அது வழக்கு சம்பந்தப்பட்டது என்று வந்தபின், அதை ஏன் அவன் மறைத்து வைக்க வேண்டும்? அனைத்துப் புள்ளிகளையும் அவன் இணைத்து பார்க்கலாமே...? அல்லது அவன் ஏற்கனவே நினைத்து பார்த்து விட்டானோ? இந்த வழக்கிற்குள் ஒரு ஹேக்கரை அழைத்து வந்தது ஓவியன் தான்... அதுவும் அவனது சொந்த விருப்பத்தின் பெயரில்... ஹேக்கரின் உதவியுடன் இந்த வழக்கு சம்பந்தப்பட்டமான ஏதோ ஒரு விஷயத்தை அவன் நிச்சய படுத்திக் கொள்ள விரும்புகிறான் போல் தெரிகிறது. கொலை செய்யப்பட்ட அனைத்து பெண்களும், திருமணமான ஒரு ஆணுடன் கள்ளத்தொடர்பில் இருந்தவர்கள். இது சம்பந்தமான விஷயத்தைப் பற்றி பேசும்போதெல்லாம், கோபம் கொண்டு, ஓவியன் தனது சுயக்கட்டுப்பாட்டை இழப்பதை அவனும் கவனித்திருக்கிறான். ஆஸ்பயர் பிரமோட்டர்ஸ் மேனேஜர், அகோரமூர்த்தியின் மீது அவன் கோபமாய் பாய்ந்தானே... அது ஒரு காவல் அதிகாரி செய்ய வேண்டிய வேலை இல்லையே... தான் சேகரித்த விபரங்களை இன்னும் ஓவியன் ஆய்வாளரிடம் சமர்ப்பிக்காமல் வைத்திருக்கிறான். ஓவியனின் மனதில் என்ன தான் இருக்கிறது? ஓவியன் இப்படி அமைதியாய் இருந்தால், கொலைகாரன் தனது பணியை தொடர்ந்து செய்து கொண்டு தானே இருப்பான், என்று எண்ணினான் முருகன்.
![](https://img.wattpad.com/cover/327480651-288-k177768.jpg)
YOU ARE READING
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️
Mystery / Thrillerமுறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொ...