18 எங்கே அது?

792 51 8
                                    

18 எங்கே அது?

ஓவியன், இடக்கைப் பக்கம் திரும்பிய போது, அவன் தன்னை மேகா இருக்கும் அறைக்கு கொண்டு செல்வதை உணர்ந்தாள் தூரிகை. மேகாவின் பக்கத்தில் அவளை படுக்க வைத்தான். தூரிகைக்கு அப்பாடா என்றானது. ஆனால் அவளது நிம்மதி வெகு நேரம் நீடிக்கவில்லை. ஓவியன் கூறியதை கேட்டு அவள் திடுக்கிட்டாள்.

"நீங்க இன்னும் தூங்கலைன்னு எனக்கு தெரியும்" என்றான் அவளது காதில்.

மென்று விழுங்கியபடி மெல்ல கண் திறந்தாள் தூரிகை.

"ரிலாக்ஸ்... குட் நைட்..."

விளக்கை அணைத்துவிட்டு, அந்த அறையை விட்டு வெளியேறினான் ஓவியன்.

கட்டிலில் எழுந்து அமர்ந்த தூரிகை, தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

"என்ன வேலைக்கு தூரிகை பண்ணி தொலைச்ச நீ? கல்யாணம் ஆன முதல் நாளே கையும் களவுமா மாட்டிக்கிட்டியே... ஏசி சார் என்ன நினச்சாரோ தெரியலையே..."

மேலும் புலம்பி கொட்டியவாறு இருந்தாள்.

புன்னகையுடன் தன் கட்டிலில் படுத்திருந்தான் ஓவியன். தான் ஒரு போலீஸ்காரன் என்பதை தன் மனைவி மறந்து விட்டாள் போல தெரிகிறது. தூங்குவது போல் பாசாங்கு செய்த போது அவள் மேகாவை விட சிறுபிள்ளை போல் இருந்தாள். வரும் நாட்கள் தூரிகையுடன் ரகலையாய் இருக்கப் போகிறது... அதை எண்ணிய போது அவனுக்கு சிரிக்க வேண்டும் என்று தோன்றியது. புன்னகையுடன் கண்களை மூடிக்கொண்டான் ஓவியன்.

மறுநாள் காலை

தனக்கான காபியை கலந்து கொண்டிருந்தாள் தூரிகை. காபியின்றி, அவளது காலை புத்துணர்ச்சியுடன் விடிவதில்லை. சேர்ந்தார் போல், அவளுக்கு தலையை வேறு வலித்தது. முதல் நாள் இரவு, அவளுக்கு நிம்மதியான உறக்கமே இல்லை. ஓவியனை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற நினைப்பில், அவள் தூங்கவே இல்லை.

கலந்த காபியை, அவள் குவளையில் ஊற்றிய பொழுது, அவள் காதுக்கு வெகு அருகாமையில்,

ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️Onde histórias criam vida. Descubra agora