19 நந்தகுமாரின் கோபம்
தூரிகையை எப்படி காப்பது என்று எண்ணியபடி இருந்தான் ஓவியன். அவளுக்கு தெரியாமல் இதை அவன் செய்தாக வேண்டும். அவளுக்கு தெரிந்தால், நிச்சயம் பதட்டமடைவாள். பிரின்ஸ்க்கு ஃபோன் செய்தான் ஓவியன். ஆனால், அவனது அழைப்பை ஏற்கவில்லை பிரின்ஸ். அவன் ஏதாவது முக்கியமான வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று எண்ணினான் ஓவியன். இதைப் பற்றி எண்ணியபடியே அலுவலகம் வந்து சேர்ந்தான் ஓவியன். அதே நேரம், அவனுக்கு பிரின்ஸிடம் இருந்து அழைப்பு வந்தது.
"சொல்லு மச்சான்" என்றான் பிரின்ஸ்.
"நான் கொடுத்த நம்பர்ல இருந்து, ஏதாவது கால்ஸ் இல்லனா மெசேஜஸ் வந்துதா?"
"என்ன மச்சான் ஆச்சரியம்... யாரும் யாருக்கும் கால் பண்ணவே இல்ல. என்ன ஆச்சி இவங்களுக்கு எல்லாம்?"
"பயம் தான் காரணம்"
"ஓ..."
"அந்தக் கில்லர், எல்லாரும் அவனோட லிஸ்டில் இருக்கிறதா, அவங்களுக்கு மெசேஜ் அனுப்பி இருக்கணும்..."
"இன்ட்ரஸ்டிங்..."
"அப்படி சொல்லிட முடியாது. நம்ம எப்படியும் அவனை பிடிச்சாகணும். அதுக்கு என்ன செய்யணும்னு சொல்லு"
"உன்னோட ஹை அஃபிசியல்ஸ் கிட்ட பேசி, இஸ்ரோ (ISRO) கிட்ட ஹெல்ப் கேட்க சொல்லு. அந்த கொலைகாரன் சாட்டிலைட் ஃபோனை யூஸ் பண்றதா இருந்தா, அவங்களால ஈஸியா கண்டுபிடிச்சிட முடியும்"
"சரி"
"நானும், நீ எனக்கு அனுப்புன எல்லா நம்பரையும் ட்ராக் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன். நானும் அவனை லொகேட் பண்ண ட்ரை பண்றேன்"
"தேங்க்யூ பிரின்ஸ்"
அழைப்பை துண்டித்து விட்டு அலுவலகத்திற்குள் நுழைந்த போது, அவனுக்கு தூரிகையிடம் இருந்து அழைப்பு வந்தது"
"ஏசி சார், மேகாவோட ஹெல்த் ட்ரிங்க் காலியாயிடுச்சு. சாயங்காலம் நான் அவளை அழைச்சுக்கிட்டு கடைக்கு போயிட்டு வரட்டுமா?"
YOU ARE READING
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️
Mystery / Thrillerமுறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொ...