17 திருமணம்
திருமண ஏற்பாடுகளை பார்த்த தூரிகை, அதிர்ந்து நின்றாள். இது, தன் வாழ்வின் முக்கியமான நாள் என்று ஓவியன் கூறியது இந்த அர்த்தத்தில் தானா?
"கல்யாணமா?" என்று திணறினாள் தூரிகை.
"இது என் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான நாள்னு நான் தான் சொன்னேனே" என்றான் ஓவியன்.
"ஆனா, நான் வேற என்னவோ நினைச்சேன்" தயங்கினாள் தூரிகை.
"எனக்கு வேண்டியதை கொடுப்பேன்னு நீங்க எனக்கு வாக்கு கொடுத்திருக்கீங்க" என்றான் கைகளைக் கட்டிக் கொண்டு.
"ஆனா, நான் இதை எதிர்பார்க்கல"
"இப்ப உங்க முடிவு என்ன?"
"முடிவா?"
"நீங்க கல்யாணத்துக்கு தயாரா இருக்கும் போது, எதுக்காக தாமதம் செய்யணும்? நம்ம கல்யாணம் ஒரு முகூர்த்த நாளில் நடக்கணும்னு தானே நீங்க விருப்பப்பட்டீங்க? இன்னிக்கு முகூர்த்த நாள் தான்"
பண்டிதரை நோக்கி திரும்பிய ஓவியன்,
"ஐயரே, இன்னிக்கு முகூர்த்த நாள் தானே?" என்றான்.
"ஆமாம் இன்னிக்கு ரொம்ப நல்ல முகூர்த்த நாள்" என்றார் பண்டிதர்
"இப்ப சொல்லுங்க..."
அங்கிருந்து ஓட்டமாய் ஓடிப்போனாள் தூரிகை.
"தூரிகை, நில்லுங்க" என்று பின்னாலிருந்து கத்தினான் ஓவியன்
தூரிகை நிற்காமல் போகவே, அவளை பின்தொடர்ந்து ஓடி வந்தான் ஓவியன். அம்மன் சிலையின் முன், கை கூப்பி, கண்களை மூடி நின்றிருந்தாள் தூரிகை. அதை கண்ட ஓவியன், அவளை தொந்தரவு செய்யாமல் நின்றான்.
"அம்மா தாயே, என்னோட வாழ்க்கையில ஏற்கனவே நிறைய எதிர்பாராத திருப்பங்களை பாத்துட்டேன். இதுக்கப்புறம் என் வாழ்க்கையில் என்ன நடக்க போகுதோ எனக்கு தெரியல. இந்த நிமிஷத்துல இருந்து, என்னோட வாழ்க்கையை நான் உங்ககிட்ட விட்டுடறேன். என்னோட வாழ்க்கை உங்க பொறுப்பு. என்னை நீங்க தான் வழி நடத்தணும்"
![](https://img.wattpad.com/cover/327480651-288-k177768.jpg)
YOU ARE READING
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️
Mystery / Thrillerமுறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொ...