29 அலட்சியம்
தன் கைபேசியின் திரையில் ஒளிர்ந்த ஓவியனின் பெயரை பார்த்த பிரின்சின் முகம் அதைவிட அதிகமாய் ஒளிர்ந்தது.
"பரவாயில்லையே, என்னை நீ இன்னும் ஞாபகம் வச்சிருக்கியே..."
"வாய மூடு டா..."
"இந்த கேஸ் முடிஞ்ச பிறகு நீ எனக்கு ஃபோன் பண்ண மாட்டேன்னு நெனச்சேன்"
"நீ சொல்றது சரி தான். ஆனா, கேஸ் இன்னும் முடியல"
"என்னடா சொல்ற? அதான் கொலைகாரன் செத்துட்டானே..."
"இங்க பிரச்சனையே வேற... நீ நியூஸ் பாக்கலையா? அவங்க நிறைய பேர் இருக்காங்க"
பிரின்சிடம் கூட உண்மையை கூறவில்லை ஓவியன். எந்த விதத்திலும் உண்மை வெளியாவதை அவன் விரும்பவில்லை.
"பாத்தேன். இப்போ நான் என்ன செய்யணும்?"
"அகோர மூர்த்தியை யாரோ மிரட்டுறாங்க"
"அகோர மூர்த்தி.... அகோர மூர்த்தி.... ( தன் நெற்றியை தட்டி, யோசித்தான் பிரின்ஸ்) ஓ... அந்த ஆஸ்பயர் பில்டர் மேனேஜரா?"
"உனக்கு அந்த ஆளை இன்னும் ஞாபகம் இருக்கா?"
"மறக்கிற ஜென்மமா அது? அரை கிழவனா இருந்துகிட்டு, காதல் ரசம் சொட்ட சொட்ட, என்னென்ன டயலாக் பேசினான் அந்த ஆளு... *நீ என் தூக்கத்தை திருடிட்ட டி செல்லம்...*" வாய்விட்டு சிரித்தான் பிரின்ஸ்.
"தான் செஞ்சதுக்கான பலனைத் தான் இப்ப அவன் அனுபவிச்சுக்கிட்டு இருக்கான்... தூக்கமே வராம..." என்றான் எரிச்சலுடன் ஓவியன்.
"செம த்ரில்லிங்கா இருக்கு மச்சி..."
"ஆமாம். அவனை மிரட்டுறது யாராயிருக்கும்னு கூட நான் கெஸ் பண்ணிட்டேன்"
"அப்படி போடு அருவாளை... யாரு மச்சான் அந்த நல்லவன்?"
"சொல்றேன்... ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு"
"பிரின்ஸ்சோட ஹிஸ்டரியில் சிக்கல் அப்படிங்கிற வார்த்தைக்கு இடமே இல்ல... சில நிமிஷத்துல என்னால உனக்கு அவன் நம்பரை கொடுத்துட முடியும். என்னை பத்தி உனக்கு தெரியும்ல?"
YOU ARE READING
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️
Mystery / Thrillerமுறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொ...