32 துப்பு
ஆஸ்பயர் பில்டர்ஸ் அலுவலகத்தை வந்து அடைந்தார்கள் ஓவியனும், முருகனும். இங்கும் அங்கும் தன் தங்கள் கண்களை ஓட விட்டார்கள். அங்கிருந்த சிசிடிவி கேமரா அவர்கள் கண்ணில் பட்டது. அந்த அலுவலகத்தின் துணை மேலாளரிடம் சென்றார்கள். அவர்களைப் பார்த்தவுடன் துணை மேலாளர் பதட்டமானார்.
"ஐ அம்..." என்ற ஓவியனது பேச்சை வெட்டி,
"ஏசிபி ஓவியன்... எனக்கு தெரியும் சார். நான்சியை பத்தி விசாரிக்க இங்க வந்தப்போ நான் உங்களை பாத்திருக்கேன்"
"இப்போ நாங்க இங்க வந்திருக்கிறது அகோரமூர்த்தியை பத்தி விசாரிக்க" என்றான் முருகன்.
"அவருக்கு இப்படி ஒரு பக்கம் இருக்கும்னு என்னால நம்பவே முடியல சார். அவரு ஆஃபீஸ்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பாரு"
"நான்சி ஒருத்தியை தவிர... இல்லையா?" என்றான் முருகன்.
"அவங்களுக்குள்ள ஒரு நல்ல நட்பு இருக்கிறதா நான் நினைச்சேன். ஆனா இப்படி ஒரு விஷயத்தை நான் யோசிக்கல சார்"
"அகோரமூர்த்தி உங்களுக்கு ஃபோன் பண்ணாரா?"
"ஆமாம் சார், ஹாஸ்பிடல்ல இருந்து ஃபோன் பண்ணியிருந்தாரு. கொஞ்ச நாளைக்கு அவரால ஆஃபீசுக்கு வர முடியாதுன்னு, என்னை மேனேஜ் பண்ணிக்க சொன்னாரு"
"இப்போ அவர் எங்க இருக்காருன்னு உங்களுக்கு தெரியுமா?"
"வேற எங்க சார்? அவரோட வைஃபை சமாதானப்படுத்த முயற்சி பண்ணிக்கிட்டு இருப்பாரு"
"சமாதானப்படுத்தவா?"
"ஆமாம் சார். ஏற்கனவே, அவருக்கு இருந்த மரியாதை போயிடுச்சு. அதை முழுசா அவரு இழக்க விரும்பமாட்டாரு. அதை காப்பாத்திக்க அவருக்கு இருக்கிற ஒரே வழி, அவங்க வைஃபை சமாதானப்படுத்துறது தான்"
"ஆனா இப்ப அவங்க அவர்கூட இல்ல" என்றான் ஓவியன்.
"என்ன சார் சொல்றீங்க?" என்றார் அதிர்ச்சியாக.
"அவங்க அவரை விட்டு போயிட்டாங்க."
"அப்படின்னா அவங்க அவரை டைவர்ஸ் பண்ண போறாங்கன்னு சொல்றீங்களா?"
![](https://img.wattpad.com/cover/327480651-288-k177768.jpg)
YOU ARE READING
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️
Mystery / Thrillerமுறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொ...