31 எங்கு போனான்?
தன் அக்காவின் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்ல, தூரிகையுடனும், மேகாவுடனும் மருத்துவமனைக்கு சென்றான் ஓவியன். குழந்தையை தூரிகையின் கையில் கொண்டு வந்து கொடுத்தாள் ஒரு செவிலி. அவனை காண்பதற்காக எம்பி குதித்த வண்ணம் இருந்தாள் மேகா. ஒரு நாற்காலியில் அமர்ந்து, அவளை குழந்தையை பார்க்கும் படி செய்தாள் தூரிகை. ஏராளமான ஆசையுடன் குழந்தையின் கண்ணத்தை மெல்ல வருடி கொடுத்தாள் மேகா.
"இவன் எவ்வளவு குட்டியா இருக்கான்ல?" என்றாள் கண்ணில் மின்னலடிக்க.
"இப்போ தானே பொறந்திருக்கான்...! அதனால குட்டியா தான் இருப்பான்" என்றாள் தூரிகை.
"நம்ம இவனை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா?" என மேகா கேட்க, குழந்தையை தன்னிடம் கொடுத்த செவிலியை ஏறிட்டாள் தூரிகை.
"நீங்க தாராளமா அவனை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போகலாம். ஆனா, நீங்க அவனை ரொம்ப ஜாக்கிரதையா பாத்துக்கணும். ஏன்னா, அவனுக்கு ரொம்ப ஈஸியா இன்ஃபெக்ஷன் ஆகும்"
"அதுக்கு நாங்க என்ன பண்ணனும்?" என்றாள் மேகா.
"கையை கழுவாம அவனை தொடக்கூடாது. அடிக்கடி முத்தம் கொடுக்கக் கூடாது."
"நான் அவனுக்கு முத்தம் கொடுக்க கூடாதா?" என்றாள் மேகா சோகமாய்.
"கொடுக்கலாம்... குளிச்சு முடிச்சு சுத்தமா இருக்கும் போது தான் கொடுக்கணும். அவன் பக்கத்துல போறதுக்கு முன்னாடி, சுத்தமா கை காலை எல்லாம் கழுவிட்டு போகணும்"
"அப்புறம்?"
"டெய்லி வீட்டை துடைக்கணும். அவன் படுத்திருக்கிற பெட்ஷீட்டை தினமும் மாத்தணும்"
"ஓகே " பெரிய மனுஷியை போல் அனைத்தையும் கேட்டுக் கொண்டாள் மேகா.
அப்பொழுது அங்கு வந்தார் மருத்துவர்.
"குட் மார்னிங் டாக்டர்" என்றான் ஓவியன்
"குட்மார்னிங் ஏ சி பி சார்"
"நாங்க இவனை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போகலாமா?"
YOU ARE READING
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️
Mystery / Thrillerமுறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொ...