22 தடயம்

769 54 5
                                    

22 தடயம்

இரவு உணவை முடித்து கொண்டு, டிவியை ஆன் செய்து கொண்டு அமர்ந்தாள் தூரிகை. இயல்பாய் அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டான் ஓவியன். திடுக்கிட்டு அவனை நோக்கி திரும்பினாள் தூரிகை. அவளது பார்வையை கண்டுகொள்ளாமல், தொலைக்காட்சி பெட்டியில் கண்களை பதித்துக் கொண்டு, தன் கரத்தால் அவளது தோள்களை சுற்றி வளைத்துக் கொண்டான் ஓவியன். அவன் கரங்களுக்குள் சங்கடத்துடன் நெளிந்தாள் தூரிகை. அவள் தோளை அழுத்தமாய் பற்றி கொண்டு, ஆழமாய் அவளை நோக்கினான் ஓவியன்.

"ரிலாக்ஸ்... எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற?" என்றான்.

"எந்த அளவுல இருக்கு?" என்றாள் தூரிகை.

"நீ எதை கேக்குற?"

"நீங்க, உங்க கேசை சுத்தமா மறந்துட்டீங்க போல தெரியுது...?"

"நிச்சயமா இல்ல" என்று சிரித்தான் ஓவியன்.

"ரொம்ப சாவகாசமா வீட்ல உட்கார்ந்து இருக்கீங்க...? உங்களுக்கு கொலைகாரனை பிடிக்கிற எண்ணம் இல்லையா?"

"பிடிக்கணும்... சந்தேகம் இல்லாம பிடிச்சே தீரனும்"

"நீங்க ஒரு விஷயத்தைப் பத்தி யோசிச்சி பார்த்தீங்களா?"

"எதைப் பத்தி?"

"நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி, என்னை அடிக்கடி அவன் மிரட்டிகிட்டே இருந்தான். ஆனா, கல்யாணத்துக்கு பிறகு, ஒரு தடவை கூட அவன் எனக்கு ஃபோன் செய்யவே இல்ல"

"ஆமாம், நானும் அதைப் பத்தி யோசிச்சேன்"

"ஒரு போலீஸ் ஆஃபீஸரோட ஒய்ஃப் கிட்ட அவனோட மிரட்டல் செல்லுபடி ஆகாதுன்னு அவனுக்கு புரிஞ்சுடுச்சு போல இருக்கு"

"இருக்கலாம்... ஆனா அதுக்காக, நம்ம ரொம்ப கேர்லெஸ்ஸா இருக்கக் கூடாது"

"உங்களுக்கு எந்த க்ளூவும் கிடைக்கவே இல்லையா?"

"உண்மையை சொல்லட்டுமா? இப்பல்லாம் என்னுடைய மூளை வேலை செய்யவே மாட்டேங்குது. முக்கியமா நம்ம கல்யாணத்துக்கு பிறகு..."

ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️Where stories live. Discover now