25 முடிவு?

718 51 8
                                    

25 முடிவு?

எதற்காக அகிலன் இங்கு தூரிகையை பற்றி பேச வேண்டும் என்று குழப்பம் அடைந்தான் முருகன். தூரிகையும் இந்த வழக்கில் ஏதாவது ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டிருப்பாளோ? தன் நாக்கை கட்டுப்படுத்த முடியாமல் கேட்டே விட்டான் முருகன்.

"உனக்கு தூரிகை சிஸ்டரை பத்தி எப்படி தெரியும்? நீ எதுக்கு தேவையில்லாம இப்ப அவங்களை பத்தி பேசுற?"

"தேவையில்லாம பேசுறேனா? நிச்சயமா இல்லை முருகன் சார். இந்த கேஸோட துருப்புச் சீட்டே அவங்க தான். அவங்களால தான், இப்போ நீங்க இங்க என் முன்னாடி நின்னுகிட்டு இருக்கீங்க. அவங்க மட்டும் இந்த கேஸ்ல தலையிடாமல இருந்திருந்தா, நீங்க எப்பவுமே என்னை நெருங்கியிருக்க முடியாது. நான் சொல்றது சரி தானே ஏ சி சார்?"

"என்ன சார் இவன் இப்படி சொல்றான்? அவன் சொல்றது உண்மையா?"

"ஏசி சார் பொண்டாட்டியை பத்தி நான் பொய் சொல்லுவேன்னு நீங்க நினைக்கிறீங்களா?"

திகிலுடன் ஓவியனை ஏறிட்டான் முருகன். அவன் காட்டிய அமைதி, அவனுக்கு பயத்தை உண்டு பண்ணியது. தூரிகை இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவளா?

"சார், உங்க போலீஸ் மூளைய வச்சி, இல்லாததையும் பொல்லாததையும் யோசிக்காதீங்க. அவங்க இந்த கேஸ்ல நேரடியா சம்பந்தப்பட்டவங்க இல்ல. அவங்க மட்டும் இல்லன்னா, உங்களுக்கு என் மேல சந்தேகம் வந்திருக்காதுன்னு தான் சொன்னேன்"

முருகன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

"ஆனா, அவங்க மட்டும் இந்த கேஸ்ல சம்பந்தப்படாம இருந்திருந்தா, ஏ சி சார் அவங்களை கல்யாணம் பண்ணி இருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன்" என்றான் புன்னகையுடன்.

முருகன் மேலும் குழப்பம் அடைந்தான்.

"நான் ஈஸ்வரன் சாரோட பையனுக்கு ஆதார் கார்டை கொடுக்க அவன் கைரேகையை கேட்ட போது தான், ஏசி சார் தூரிகை மேடம் சம்பந்தப்பட்ட விஷயத்தை தொடர்பு படுத்திப் பார்த்து நான் தான் கொலைகாரனா இருக்கணும்னு முடிவுக்கு வந்திருப்பார். நான் சொல்றது சரி தானே சார்?"

ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️Where stories live. Discover now