15 கௌரவமானவர்கள்...?
தான் செய்தது சரியா என்பது பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள் தூரிகை. அவளுக்கு சில நாட்களுக்கு முன்பே பரிச்சயமான ஒருவனின் வீட்டில் அவள் அமர்ந்திருக்கிறாள். எப்படி அவ்வளவு சுலபமாய் அவனை திருமணம் செய்து கொள்ள அவள் ஒப்புக்கொண்டு விட்டாள் என்று அவளுக்கே புரியவில்லை. அவளைப் பிடித்திருக்கிறது என்று அவன் கூறினான்... சிறிதும் யோசனை இன்றி, எப்படி அவள் அதை நம்பி விட்டாள்? அவளது சூழ்நிலை காரணமா? அல்லது கொலைகாரனின் மிரட்டல் காரணமா?
பிரட் டோஸ்ட்டும், ஆம்லெட்டும் தயார் செய்து கொண்டிருந்த ஓவியன் அவளை கவனித்தான். அதை ஒரு தட்டில் வைத்து அவளிடம் நீட்டிய அவன்,
"இதை சாப்பிட்டுட்டு, உங்க டவுட் என்னன்னு என்கிட்ட கேளுங்க" என்றான்.
அவனை திகைப்புடன் ஏறிட்டாள் தூரிகை.
"என்னை கல்யாணம் பண்ணிக்க எப்படி அவ்வளவு ஈஸியா ஒத்துக்கிட்டோம்னு தானே யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க?"
"அது... வந்து..."
"நான் உங்களை ஏமாத்திடுவேன்னு நினைக்கிறீங்களா?"
"உண்மையை சொல்லனும்னா, என்னைத் தவிர வேறு யாரையும் என்னால நம்ப முடியல. நடக்கிறதை எல்லாம் பாக்கும் போது, என்னால் பாசிட்டிவா யோசிக்கவே முடியல. இங்க யாருமே நம்பகமானவங்க இல்ல... பொம்பளைங்களும் சரி... ஆம்பளைங்களும் சரி..."
"உங்களை செக்யூர்டா ஃபீல் பண்ண வைக்க நான் என்ன செய்யணும்?"
"நிஜமா எனக்கு தெரியல"
"உங்களோட இன்கம் சோர்ஸ் என்ன?"
"எதுவுமே இல்ல... எங்களோட எல்லா சேமிப்பையும் போட்டு தான் எங்க அண்ணன் இந்த ஃபிளாட்டை வாங்கினான். அவனோட ஆஃபீசுக்கு பக்கத்துல வீடு இருக்கணும்னு காரணம் சொன்னான். அதனால எங்க பழைய வீட்டை கூட நாங்க வித்துட்டோம். மீதம் இருக்கிற பேங்க் பேலன்ஸ் தீர்ந்து போறதுக்கு முன்னாடி, எனக்கு ஒரு வேலையை தேடிக்கணும்னு தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்"
![](https://img.wattpad.com/cover/327480651-288-k177768.jpg)
أنت تقرأ
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️
غموض / الإثارةமுறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொ...