16 முக்கியமான நாள்
இந்த வழக்கில் ஓவியனின் அணுகுமுறையை பற்றி யோசித்துக் கொண்டிருந்தான் முருகன். அப்பொழுது,
"சார்" என்று யாரோ அழைப்பது கேட்க, தலை நிமிர்ந்தான்.
அகிலன் அவனுக்கு முன்னால் நின்று கொண்டு இருந்தான். அந்த வழக்கில் முதலில் கொலையான சுபாஷினியின் கணவன் தான் அகிலன் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
"நீங்க என்ன இங்க வந்திருக்கீங்க? கொலையாளி பத்தி ஏதாவது துப்பு கிடைச்சுதா?" என்றான் முருகன்.
"இல்ல சார். நான் என் சொந்த ஊருக்கு போகணும். அதான் உங்ககிட்ட பர்மிஷன் வாங்கலாம்ன்னு வந்தேன்"
வழக்கு சம்பந்தப்பட்ட யாரும் சென்னையை விட்டு வெளியே எங்கும் செல்லக்கூடாது என்று சொல்லப்பட்டிருந்தது.
"ஏதாவது சீரியஸான விஷயமா?"
"ஆமாம் சார்"
"என்ன விஷயம்?"
"என் ஃப்ரெண்டுக்கு கல்யாணம் சார்"
"அதுல என்ன சீரியஸ் இருக்கு?"
"கல்யாணத்து மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு சார். யாராவது கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னா, அவங்களை பார்க்க பாவமா இருக்கு" என்றான் அகிலன்.
அவன் கூறியது சரி தான் என்று தோன்றியது முருகனுக்கு. இந்த வழக்கிற்கு பிறகு பெரும்பாலானவர்கள் அப்படித்தான் நினைக்கத் துவங்கி இருந்தார்கள்.
"திரும்பி வர எத்தனை நாள் ஆகும்?"
"ரெண்டு நாள்ல வந்துடுவேன் சார்"
"நீங்க ஓவியன் சார் கிட்ட தான் பர்மிஷன் கேட்கணும்"
"இன்னைக்கு அவர் வரமாட்டாரா சார்?"
"இப்ப தான் கிளம்பி போனாரு"
"நான் வேணும்னா அவங்க வீட்டுக்கு போய் அவர்கிட்ட பேசட்டுமா சார்?"
"இல்ல இல்ல... நானே அவரை கூப்பிடுறேன்"
முருகனுக்கு தெரியும். வழக்கு சம்பந்தப்பட்ட யாரும் தன் வீட்டிற்கு வருவது ஓவியனுக்கு பிடிக்காது என்று.
YOU ARE READING
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️
Mystery / Thrillerமுறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொ...