27 புதுக் குழப்பம்
தன்னை படுக்கையறை நோக்கி இழுத்துச் சென்ற ஓவியனை தடுத்து நிறுத்தினாள் தூரிகை.
"நான் இப்போ தூங்க போறதில்லை ஏசி சார்" என்றாள்.
"அப்படின்னா உன்னை என் பெயரை சொல்ல வைக்கிறேன்"
"வேற ஏதாவது பேசுங்களேன்"
"படுத்துகிட்டே பேசலாமே..."
அவளை தன் அருகில் இழுத்து அவனும் படுத்து கொண்டான்.
"சொல்லு, என்ன பேசணும்?"
"எதுக்காக நீங்க டிபார்ட்மெண்ட்ல இருந்து ஒரு கேப் எடுத்தீங்க?"
அவளை நோக்கி திரும்பிய ஓவியன், அவளை ஆச்சரியமாய் பார்த்தான். அவனைப் பற்றி அவள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாள். ஒருவேளை, அவள் இன்டர்நெட்டில் கூட அதற்கான விவரங்களை தேடியிருக்கலாம்.
"அக்காவுக்காக தான் கேப் எடுத்தேன். உண்மையை சொல்லப் போனா, அக்காவோட ஆக்சிடென்ட்டுக்கு பிறகு, நான் டிபார்ட்மெண்ட்ல சேர்ற எண்ணத்திலேயே இல்ல. என் மூளை வேலை செய்யவே இல்ல. எனக்கு அக்கா தான் எல்லாம். ஆக்சிடென்ட்க்கு முன்னாடி அவங்க எனக்கு அனுப்புன மெசேஜை கேட்டு நான் நொறுங்கி போயிட்டேன். அவங்க தன் புருஷனை எவ்வளவு ஆழமா நேசிச்சாங்க தெரியுமா? அவர் அக்காவை ஏமாத்திட்டாருன்னு இப்ப கூட என்னால நம்ப முடியல. அக்கா ஆசைப்பட்ட எதையும் அவர் இல்லைன்னு சொன்னதே இல்ல. எந்த ஒரு ஈகோவும் இல்லாம, எல்லாரும் முன்னாடியும் அக்காவோட காலை அழுத்ததி விடுவாரு. ஆனா அதெல்லாம், அவர் மேல யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுங்குற ஒரே காரணத்துக்காக தான் செஞ்சாருன்னு எங்களுக்கு அப்ப தெரியாது" என்று தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு கூறிய ஓவியன்,
"நான் ஒருவேளை உன்னை ஏமாத்தினா நீ என்ன செய்வ?" என்றான்.
"நீங்க என்னை ஏமாத்த மாட்டீங்க ஏசி சார்"
"இரு..."
மேஜை டிராயரிலிருந்து குளோரோஃபார்ம் ஸ்பிரேவை எடுத்து அவளிடம் கொடுத்த ஓவியன்,
![](https://img.wattpad.com/cover/327480651-288-k177768.jpg)
ČTEŠ
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️
Mystery / Thrillerமுறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொ...