காதல் காதல் தூவும் தூவும்
சாரல் தூறும்
யாவும் மாயமே
ஜன்ம ஜன்மம் கொண்ட காதல்
இன்னும் நீளும்
காலம் காணுமே
நெஞ்சில் நஞ்சும் ஏறும் நேரம்
விம்மும் நெஞ்சம்
மிஞ்சுமே
இருவரும் உலா போகும் காலம்
இருவிரல் ஒன்று சேர தோன்றும்
உணர்ச்சிகள் உடைந்தோட முந்தும்
உள்ளம் உறைவிடம் தேடும்
நிழல், நிலம், நினைவென
நீயான உலகம் இது!
நீயில்லாது தனியே
நிற்கவும் நிமிடந்தான் ஏது ?
அனல் தழல் நெருப்பினில்
அலைகின்ற
தீயோ நீ..!
நான் அணைத்ததும்
எனை நனைக்கும்
மழைதானே..... முகிலே நீ.....
வீணையென விரல்தனில்
மீட்டுகிறேன் உன்னை
இசைதனை பொழியாது
மெளனிக்கிறாய் ஏனோ !
மலர்களால் நீராடும்
மாஞ்சோலை இளங்கிளியே
ஒன்றிணைந்து ஒன்றாகி
வாழ்வோம் இவ்வுலகினிலே
YOU ARE READING
தென்றலில் தேவதைகள்
Poetryதிமிர் பிடித்து திரிகின்றாயா ஆண்களை திமிரப் பிடித்து கண்களால் தின்கின்றாயா? தென்றலில் தேவதையாக நீ தெரு வாடை காற்றில் நான் உணர்வுக் கவிதைகள் உங்களுக்காக