காலாவதி கனவு

29 1 0
                                    

அது ஐந்தாம் வகுப்பில்

அறிவியல் பாட வேளை....

அலுத்துக் கொண்டே

வாழ்வு நடத்தும்

அந்த ஆசிரியர்

"கலாம்" சொன்னதாக

சொன்னார்.

"கனவு காணுங்கள்....."

வகுப்பறையுள்ளே

பல முனுமுனுப்பு......

புதியதோர் புரட்சியின்

இரண்டாவது கலாம்

இன்னொரு எடிசன்

இந்தியாவின் நாளைய

தூணொன்று 

மெல்ல எழுந்து நிற்பதற்காய்

அடித்தளத்திற்காய்

மெல்ல தன் 

ஞானத் தாழை திறக்க

முற்பட்டது.

கனவு எங்கே வரும்?

நெற்றிப் பொட்டின் பிண்ணனியிலா?

இமையெனும்  திரையிலா?

விடை தெரியா ஆசிரியருக்கு

தெரிந்ததென்னவோ

ஒன்று மட்டுந்தான்

" கற்பித்தலும், கறவைத்தலும்"

இன்னொரு

இருபத்தொன்றாம் நூற்றாண்டு

இளம்  சாக்ரடீஸ்

எழுந்து கேட்டான்

கனவு என்ன நிறம்?

கொல்லென்ற சிரிப்பலைக்கு

கொள்ளி போட்டது..

முக்கால் நொடியிற்குள்

மூங்கிலடியின் ஓசை....

மீண்டும்

சைத்தான் வேதம் ஓதினாற் போல்

அப்துல் கலாமை

பாராயணம் செய்தார்.

தன் சிவந்த கையை

தடவியவாறே சொன்னான்

அம்மாணவன்

"எனக்கும் கனவுக்கும்

இடையேயான 

இடைஞ்சல்கள் இரண்டு தான்...

ஒன்று வறுமை

மற்றொன்று...கல்வி முறை "

ஒன்று மாறினால்

மற்றொன்றும் மாறி விடும்

ஆனால்

ஒரு சாபக்கேடு

ஒன்று கூட மாறப் போவதில்லை......

You've reached the end of published parts.

⏰ Last updated: Mar 06, 2017 ⏰

Add this story to your Library to get notified about new parts!

தென்றலில்     தேவதைகள்Where stories live. Discover now