கொட்டகை....,
தொழுவம்....,
தொட்டில்....,
பட்டி.....,
இதே வரிசையில்
இன்னுமோர்
இணைப்பு
"பள்ளி "
அடைத்துப் போட்டு
தீனி தரும் கல்விமுறை
அடைந்து போகாமல்
அதனினின்று ஓட நினைக்கும்
இளந்தலைமுறை
ஒரு நிலையில்
பழக்கப்பட்டு விடுவதால்
அந்த
"வைக்கோல் " பாடங்களை
மென்று விட்டு
வாழ்கின்றனர்.
அதன் சுவையற்ற
தன்மை போலவே .....
சிரிப்பையும் சிந்தனையும்
தொலைப்பது எப்படி?
பாடசாலை திட்டங்கள்
நன்றாகவே பலன் தரும்.....
YOU ARE READING
தென்றலில் தேவதைகள்
Poetryதிமிர் பிடித்து திரிகின்றாயா ஆண்களை திமிரப் பிடித்து கண்களால் தின்கின்றாயா? தென்றலில் தேவதையாக நீ தெரு வாடை காற்றில் நான் உணர்வுக் கவிதைகள் உங்களுக்காக