ஃ 69 ஃ

13 2 0
                                    

நிம்மதி...

எது நிம்மதி?

எதில் நிம்மதி??

நீ ‌காணும் நிம்மதி

பிறர்க்கும் கனவாகும்

பிறர் கண்டதுவோ அனேகம்

பெரும் பாரம்

ஒர் வார்த்தை

பல நிகழ்வுகளில்

ஓராயிரம் அர்த்தங்களை

எளிதில் ஏந்திக் கொள்ள

முற்றும் அடைய முனைந்தவர்

அடையா நிம்மதியின் மத்தியில்

பெற்றதை பேணிப் போற்ற

அவர் மனம் நிறைக்கும் நிம்மதி

தன் இயல்பை செறிவேற்றி

அதன் அழகை சிரம் சூடி

அந்நிலை உணர - அவள்

கடந்த ஆழியில் மூழ்கி

அதில் தன்னையே தொலைத்து - பின்

அன்பினும் அரிதுண்டோ என

பெற்றதோர் அளவில்லா நிம்மதி

அது வான் நனைக்கும் நதி.!








கானல் நீ(ர்)Where stories live. Discover now