காரிருள் நீங்கி
நற் காலம் தான் பிறக்கட்டும்..
போர் பகை நீங்கி
பார் பொழிவுடன் இருக்கட்டும்...
கூவும் குயிலும் இனி
குழலிசையில் கூவட்டும்..
மானிட பந்தம் எல்லாம்
மீண்டும் புதிதாய் மலரட்டும்...
ஆழி சூழ் உலகு என்றும்
அதிராமல் சுழலட்டும்...
பிறக்கும் புத்தாண்டில் எங்கும்
வல்லமை பரவட்டும்...