ரோட்டோர மொட்டை மரத்தின்உச்சியில் பூனன ஒன்று
கருவாட்டின் மணம் வந்த திசை பார்த்து நின்றிருக்க
கீழிருந்த நாய் கண்ணில் கறித் துண்டாய் இது தெரிய
கறித் துண்டை அடைவோம் என்று
வல்லென குரைத்திடவே
கல் கொண்டு எரிந்திட்டான் வழிப்போக்கன் அதன் மேலே
கருவாடோ கறித் துண்டோ
கலை அறியா மானுடன் முன்
மரம் மட்டும் காகிதமாய்..!