நேரம் மறந்து உனை பார்த்த நொடி எல்லாம்
மீண்டும் பெற என் செய்வேன் நான்?
கற்பாறை போல் என் மனம்
அறுவி நீ விழ தாங்கித் திழைப்பேன்..
தொலை தூரத்தே பார்த்த சூரியன் நீ
அருகி வர தெளிந்த வானாய் நான்..
உன் நாட்களில் நான் உளவ எண்ணி
இன்றோ உனை கொண்டு என் காலம் நிறைத்தேன்..
உன் தேகத் தழும்பு அனைத்தும் வருடி
சுவடின்றி தொலையச் செய்வேன்..
கவி கொண்டு வளர்த்திட்ட எண்ணம் - இதை
விதைப்பாயோ உடைப்பாயோ நீ?