யார்க்கும் எதும் எளிதில்
கிடைப்பதில்லை
கிடைத்தும் பல
நிலைப்பதில்லை..
சென்றவை எண்ணி
இளைத்த மனம்
அதன் கணம் அளவு
இந்த கானகம்..!
மறந்தும் அழியாத
நினைவில் துள்ளித் திரியும்
மான் - அகம்
அறியா சுதந்திரம்...?
இசை கேட்க காத்திருந்த
மனம், ஏனோ திசை மாறி
சென்றுவிட - கூடடைந்த
குயில் அதை - ஏற்குமோ மரம்?