அனிச்சம் பூ 60

4.2K 126 229
                                    

லர்கள் மலர்ந்து மணம்வீசிக் கொண்டிருந்தது , அவன் அவளுக்காகக் காத்திருந்தான் , மலர் மலர்ந்திருந்தது
பிருந்தாவனத்திலும் அல்ல ...
காத்திருந்தவன் நந்தகுமாரனும் அல்ல ...

ஆனால் பிருந்தாவனமும் தோற்றுவிடும் எழில்ச் சோலை , நந்தகுமாரனே பொறாமை கொள்ளும் காதல் வேளை , ஆம் உயிரில் நிறைந்த அன்பில் , இதையம் நிறைந்த காதலில் இருவர் இணையும் சங்கமத்திருநாள் ,

செந்துரன் அந்த அறையின் சாளரத்தின் வழியாக இரவின் இயல்பைக் கண்டு கொண்டிருந்தான் , வீசிய குளிர்காற்று முகத்தை வருடிக் கொண்டிருந்தது , மரங்களில் மோதிய காற்றில் சருகுகள் குளத்தில் உதிர , அதில் உருவான நீர்அலைகளோ மின் விளக்கின் ஒளியில் , நட்சத்திரங்கள் உருகி நீராய் மாறியது போலிருந்தது , என்றலும் செந்தூரனுக்கு ஏனோ மனம் அதில் லயிக்கவில்லை , தவிப்பும் மகிழ்ச்சியும் சரிவிகிதமாய் கலந்திருக்க , நிலையில்லாமல் தவித்த மனதோடு , கண்கள் மூடி பின்தலை கோதியவாறு ,
திரும்பி அறையைப் பார்த்தான் ..

அங்கே .. மலர்கள் மலர்ந்திருந்தது ஒரு மலர் படுகையில் , ஆம் படுகையா படுக்கையா ? சத்தியமாக எழுத்துப்பிழை இல்லை , படுகையோ எனச் சந்தேகிக்கும் அளவிற்கு ... மலர்களால் வியாபித்திருந்த படுக்கை ..

அறையின் சுவர்களில் ஒட்டிவைத்த பூச்செண்டுகள் , எட்டிப்பார்த்துச் புன்னகைப்பது போலிருந்தது அவனிற்கு .

அறையில் கண்ணாடிக் கூண்டுகளுக்குள் அழகாய் அமைதியாய் சுடர்விடும் அகல்விளக்குகளோ கண்சிமிட்டுவது போலிருந்தது .

செந்து , அருணாச்சலம் தாத்தாவின் வீட்டிற்கு வரும் போது , எப்பொழுதும் இந்த அறையில்தான் இருப்பான் , என்றாலும் இன்று ஏனோ இந்த அறை அவனுக்கு அன்னியமாய் மின்னியது .

மிதம் மிஞ்சிய மலர் அலங்காரம் வேண்டாம் என்றால் , இந்த ஆகாஷ் மாமாவும் செந்தூரியும் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை , அதிகபட்ச அலங்காரம் பார்கையில் ஏனோ இயல்பாய் இருக்க முடியமால் இதயம் படபடக்கிறது , என அவன் மனதோடு புலம்பினாலும் அவனை மீறியும் சிறு புன்னகை உதட்டோடு ஒட்டிக் கொண்டிருந்தது .

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now