ஜெயம் இல்லத்தின் ஞாயிறின் மாலை நிசப்தமான வேளையாக இருந்தது , பாலா குடும்பம் கிளம்பியதும் வீடு ஏனோ வெறுமையானதைப் போலவும் , ஜீவிகாவை சமாதானப்படுத்தியவர்களின் மனம் சமாதானம் ஆகாமலும் இருந்தது , அவரவர் அவரவரது , அறையில் இருந்தனர் , அஸ்வதி அனன்யாவின் சின்ன சின்ன சண்டைகளின்
பேச்சுச் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது ,மாலையும் யாமமும் கலக்கும் நிலவில் , கண்கள் கெஞ்சியும் உறக்கம் இல்லா இரவில் , செந்தூவுக்கு ஏனோ ஜீவிகாவின் கண்ணீர் தோய்ந்த முகம் அவன் கண் முன்னே வந்து வந்து அவனைக் கவலைக்குள்ளாக்கியது ,
செந்தூ பாலாவிற்கு வீடியோக்கால் செய்தான் ,
" மாமா வீட்டுக்கு வந்தாச்சா ? ஜீவி என்ன பண்றா ? ஜீயிடம்
கொடுங்க மாமா "" ஜீவி தூங்குறாள் செந்து "
" ஓகே மாமா குட் நைட் " என்று ஏமாற்றத்துடனே ஃபோனை வைத்தான்,
அனைவரும் இரவு உணவு முடித்து உறக்கத்திற்காய் ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளை , ஜெயராம் முற்றத்தில் ஏதோ சிந்தனையின் வசம் நின்றிருந்தார் , ஆகாஷ் அலைபேசி அழைப்புப் பேசிவிட்டு திரும்புகையில் ஜெயராமைப் பார்த்துவிட்டு அவர் அருகில் வந்தான் ,
YOU ARE READING
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )
General Fiction🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன ப...