அனிச்சம் பூ 5

3.5K 104 8
                                    


ங்கே ஒரு புறம் பொம்மியம்மாவும் செல்வாவும் கவலை கலந்த கலவரத்துடன் பேசிக்கொண்டிருக்க,

இங்கே கணேஷ் " டேய் பாலா நீ நினைக்கிற மாதிரி இது இரண்டு குடும்பத்தோட முடியிறவிஷயம் இல்லை , இரண்டு ஊர் பிரச்சனை, இரண்டு குடும்பமும் அடிப்படையில வேற ஜாதி , இதை நான் ஏன் சொல்றேன்னா செல்வாண்ணாவ அரஸ்ட் பண்ணி வச்ச ஸ்டேஷன்லதான் எங்க பெரியப்பா ரைட்டரா இருக்காரு , நேத்து குலசாமி கும்பபிட வந்திருந்தப்ப பெரியப்பா இதைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தார் , செல்வா அண்ணன ஒரு வாரமா கஸ்டடில வச்சிருந்ததுக்குக் காரணமே ஊருக்குள்ள கலவரம் வராம இருக்கனும்னு தான் , அவருமேல தப்பில்லைன்னு பரூவ் ஆவதற்க்கு முன்பே வெளிய விட்ருந்தா , தேவகி அப்பா ராஜாங்த்தோட பங்காளி வீட்டு ஆளுங்க செல்வாண்ணாவ ஏதாவது பண்ணுவாங்க , பிறகு செல்வா அண்ணா அமைதியா இருந்தாலும் அவங்க சொந்தக்காரங்க விடமாட்டாங்க ,

இது ஊர் பிரச்சனையாவும் ஜாதிபிரச்சனையாவும் மாறிடும்னுதான் ஜாமினுக்கு அலோ பண்ணலயாம் , நேத்து ரெஜிஸ்டர் மேரேஜ் எவிடன்ஸ் வந்தவுடன் இறந்த பையன் வீடு, பொண்ணுவீடு, தனா வீடுன்னு எல்லோரையும் வச்சு பேசி பிரச்சனை வரக்கூடாதுன்னு சொல்லி வான் பண்ணிவிட்டுத்தான் செல்வாண்ணாவ வெளியில விட்டாங்களாம் , இப்போ மட்டும் தனா செஞ்ச வேலை தெரிஞ்சது விஷயம் கை மீறீடும், என்றான்.

கணேஷ்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

கணேஷ்

கணேஷ் பேசியதை உள்வாங்கிய பாலா தன் இரு கைகளையும் கோர்த்து தலையின் பின்புறம் வைத்து அண்ணார்ந்து இரு கண்களை மெல்ல மூடித்திறந்தான், பின் இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டு அருகில் இருந்த தேவிகாவைப் பார்த்தான் " யார் யாரோ செய்த தவறுக்கெல்லாம் ஒன்றும் அறியாத இந்தச்சிறு பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறதே! என்று நினைத்த பாலா தேவிகாவிடம் " நீ எப்படி இந்த இட்த்துக்கு வந்த ? என்றான்,

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now