" ஜெயா நான் சொல்றத கொஞ்சம் பொறுமையாக் கேளு மா , ஜீவிகா நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தா அதைவிடப் பெரிய சந்தோஷம் வேறுஎதுவுமில்ல , ஆனா நம்ம மட்டும் விரும்பினா பத்தாது , செந்துவோட விருப்பமும் முக்கியம் ", என்றவரை இடைமறித்து ஜெயந்தி ," என்னங்க நீங்க , பாலாவப் பார்த்த நாள்ல இருந்து இந்த நிமிஷம் வரைக்கும் செந்து பண்ணதல்லாம் நீங்க பார்த்துட்டுத்தான இருக்கீங்க , அவன் அவங்க மாமா மேலே உயிரேயே வச்சிருக்கான் ,
பாலா நம்ம வீட்டுக்கு வந்த நாள எவ்வளவு அழகா செலிப்ரேட் பண்ணினான் ,ஜீவிகாவ எப்படிப் பார்த்துக்கிறான் தெரியுமா ? ஜீவிக்கு வேணுங்கறதையெல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்றான் , ஷாப்பிங்
கூட்டீட்டு போனான் , அவளுக்கு என்ன பிடிக்குமோ அதையே சமைக்கச் சொன்னான் , அவளுக்கு போரடிக்கும்னு லேப்டாப் அது இதுன்னு வாங்கிக் கொடுத்துட்டு போனான் , சென்னை போய்ட்டும் தினம் ஃபோன் பண்ணி பேசுறான் , பத்தாததுக்கு என்கிட்ட ஃபோன் பண்ணி ஜீவிய பார்த்துக்கங்கன்னு சொல்றான் , ஜீவிகா , வீட்ல இருக்க எல்லாரிடமும் பேசி பழகி இயல்பா இருக்கான்னு நான் சொன்னதும் எவ்வளவு சந்தோஷப்பட்டான் தெரியுமா ? ஜீவிகா மேல ரொம்ப பாசமா இருக்கான் "
YOU ARE READING
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )
General Fiction🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன ப...