செந்தூரன் " அந்தப்பெயரைப் பாலா கேட்கும் அந்த நொடி இதயம் அவன் வசம் இழந்து இரட்டிப்பு வேகத்துடன் துடித்தது , மூளை அதிர்ச்சியா மகிழ்ச்சியா என்று பரிதவித்தது .
பாலாவின் PA மீன்டும் ஒரு முறை உறுதி படுத்திக்கொள்ள " சார் வரச்சொல்லட்டுமா ? " என்றார்,
" சரி " என்பதாய் தலை அசைத்தவனுக்கு செந்தூரனின் சிறுவயது பூ முகம் மனக்கண்ணில் அனிச்சையாய் வந்து போனது , தன்னை அமைதி படுத்திக்கொள்ள அவகாசம் தேவைப்பட்டது , ஆனால் செந்தூரன் அந்த அவகாசத்தை தரவில்லை அடுத்த நிமிடமே வந்து நின்றான் .
தான் அள்ளி அனைத்துக் கொஞ்சி விளையாடிய ஆசை மருமகன் இப்பொழுது ஆறடி உயரமும் அழகிய தோற்றமுமாய் வந்து நின்றான் ,
பாலாவிற்கோ , தண்ணீரை மறைத்து வைத்த மேகம் போல , கண்ணீரை மறைத்து வைத்த விழிகளில் , பிரிவின் வலியும் , பதுக்கி வைத்தப் பாசத்தின் மொழியும் உணர்வுகளாய் ஒளிர , விழியில் தேங்கிநின்ற கண்ணீர் அவன் உணர்வுகளைத் தாங்கி மின்னிக் கொண்டிருந்தது .
பாசம் கண்ணீர் புன்னகை என்று அனைத்தையும் நிறைத்து வைத்திருந்த பாலாவின் விழி அலைகள் செந்தூரனில் இன்ப அதிர்வுகளை ஏற்ப்படுத்தியது .
" செந்து ... " என்ற மாமனின் அழைப்பில் இருபத்தி இரண்டு வருடங்களாய் தொலைந்த வரம் வார்தையாய் மீண்டது போல் இருந்தது செந்தூரனுக்கு ..
பாலா நீட்டிய கரத்தை அவன் தன் கரத்தால் இணைக்காமல் மாறாக மாமனைக் கட்டி அணைத்து , தனக்காக துடித்துக்கொண்டிருந்த இதயத்தின் தவிப்பைத் தானே தனித்தான் , தன் கம்பீரமான மாமனின் பூ போன்ற இதயத்துடிப்பின் நுன் அதிர்வுகள் கூட செந்தூரனின் செல்களில் எதிரொலிக்க , கண்ணீரையே கண்டிடாத செந்தூரனின் இமைகள் ஈரமானது .
YOU ARE READING
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )
General Fiction🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன ப...