ஜீவிகாவோ , செந்துவை முதலில் அவர்களது மூலிகைத் தோட்டத்திற்கு அருகே உள்ள பூந்தோட்டத்திற்குத்தான் அழைத்துச்சென்றாள் , அந்த பூந்தோட்டம் அவர்களுடைய , புது ப்ராஜக்ட்டான ஃப்ளோரல் டீ க்காக உருவாக்கப்ட்டது , முதலில் பவளமல்லியில் ஆரம்பித்து , ரோஜா , செம்பருத்தி , நித்யகல்யாணி என வரிசையாக இன்னும் பல வகை மலர்களும் சில ஏக்கர் கணக்கில் விரிந்திருந்தது ....ஸ்வேதாவும் , மானுவும் பவளமல்லியை அடுத்த ரோஜாத்தோட்டத்திலேயே , செல்ஃபியிலும் வீடியோவிலும் மூழ்கிவிட ,
செந்துவும் ஜீவியும் அடுத்து அடுத்து உள்ள மலர்த் தோட்டங்களுக்கு நடக்க ஆரம்பித்தனர் , இன்னும் சற்று நேரத்தில் மழையாய் மாறிவிடுவேன் என்பது போல் மேகங்கள் மிதந்துகொண்டிருந்தது , ஈரம் சுமந்த தென்றலோ இவர்களை வருடி விளையாடியது , வசந்தத்தின் வாசம் சுமந்த வளிமண்டலம் இவர்களை விழியில் நிறைத்துக் கொண்டிருந்தது , மலர்சோலைகள் மலர்ந்து மணம் பரப்பி காற்றில் அசைந்தாடி இவர்களோடு உரசி உரிமை பாராட்டியது .
ஜீவிகா வழக்கமாக வரும் இடம்தான் என்றாலும், செந்துவோடு நடக்கும் போது புத்தம் புதிதாய் தெரிந்தது , ஏதோ காற்றில் மிதப்பது போல் பரவசமானது அவள் மனம் .
காற்று மண்டலம் காதல் மண்டலமானது...
YOU ARE READING
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )
General Fiction🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன ப...