அனிச்சம் பூ 7

2.9K 106 11
                                    


பாலா பரிதவிப்பின் உச்சத்தில் நின்றான் , அந்த புத்தாடை மலர் மாலை என எதையும் ஏற்கவில்லை அவன் , தாலியை மட்டுமே அவன் அவள் கழுத்தில் அணிவித்தான் , அந்த ஈரடிக் கயிறு ஏற்படுத்தப்போகும் இடைவெளியை அறியாமல் , நிசப்தமான மொளனங்களைச் சுமந்த இருமனங்களுக்கும் திருமணம் நிறைவுற்றது .

பாலா தன் அக்காவிற்கு ஃபோனில் விவரம் தெரிவிப்பதற்காக செல்வாவின் வீட்டிற்கு , பாலாவும் செல்வாவும் விரைந்தனர், பாலா பல முறை முயற்ச்சித்தும் யாரும் ஃபோன் அழைப்பை ஏற்கவில்லை , தன் வீட்டிற்கு அழைத்தபோதும் அதே நிலைதான் , அப்பா அருணாச்சலத்தின் அலுவலகத்திற்குப் பேசிய போதும் அவர் அங்கு இல்லை , ஏன் ? வீட்டில் யாரும் இல்லையா ? என்னாயிற்று? என்று எண்ணங்கள் மின்னலாய் விரிந்தது ,

அடுத்த அரைமணி நேரத்தில் தேவிகா , பாலா , செந்தில் , கணேஷ் நால்வரும் தேவகாவின் பூட்டிய வீட்டின் முன் இருந்தனர் , ஏன் வீட்டில் யாரும் இல்லை ? கண்ணில் பட்ட தோட்டக்காரரிடம் கேட்டான் ,

"அய்யாவுக்கு திடீர்னு நெஞ்சுவலின்னு ஆஸ்பத்ரிக்கு கூட்டிட்டு போயிருக்காங்க " என்றான்

" அதிர்ச்சியும் அழுகையுமாக நின்ற, தேவிகா விற்கு ஆறுதல் கூறி , ஹாஸ்பிட்டல் விவரம் கேட்டுக்கொண்டு நால்வரும் அங்கு சென்றனர்.

அங்கே இவர்களை முதலில் பார்த்த தேவிகாவின் சின்ன அண்ணன் கார்த்திக் , " பாலா" என்று ஏதோ சொல்ல வாயெடுத்தவனுக்கு , தன் தங்கையின் மஞ்சள் கயிறும் மாங்கல்யமும் கண்ணில்படவே அதிர்ந்து நிற்கும் போதே ...

பாலாவின் காலரைப் பிடித்து உலுக்கி , " எங்க வீட்டு புள்ளய கூட்டிட்டு போயி எங்க மானத்த வாங்கிட்டியேடா " என்று அறைய முற்பட்ட தேவிகாவின் தாய் மாமாவை , செந்திலும் கணேஷிம் தடுத்தனர் ,

அங்கே தேவகியின் அம்மா , ஜெயந்தி , ஜெயராம் , அருணாச்சலம் , என அனைவரும் கூடினர் , அவரவர் கோபஙக்ளையும் ஆத்திர்த்தையும் கொட்டித்தீர்த்தனர் ,

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now