அனிச்சம் பூ 47

2.8K 91 84
                                    

செந்து அந்தக் கிரிஸ்டல் கிஃப்டை கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்க , ஜீவியின் ஃபோன் அழைப்பில் இசைத்தது , கார்த்திக் தான் அழைத்திருந்தான் , ஜீவி அழைப்பை ஏற்றுப் பேசிமுடித்தவள் , " கார்த்திக் மாமா தான் பேசுனாங்க , நீங்க சாப்டீங்களா என்ன பண்றீங்கன்னு கேட்டாங்க , அப்புறம் என்னை வீட்டில் தனியா விட்டுட்டு நீங்க வெளில எங்கேயும் போகக்கூடாதுன்னு சொன்னாங்க " எனக்கூற ...

அதைக் கேட்ட செந்து ஹிம் என்று ஒரு மெல்லிய கோபத்தில் , தலையசைத்து , ஜீவியிடம் ஏதோ கேட்க வருவதற்குள் , மீண்டும் ஜீவியின் அலைபேசி இசைக்க .. இந்த முறை ஜெயராம் அழைத்திருந்தார் , ஜீவி பேசிவிட்டு ஃபோனை வைத்தவள் ,

" ஜெயராம் மாமா தான் பேசினாங்க " எனக் கூறவும் , செந்து கோபத்தில் " இப்ப என்னவா ? உங்க ஜெயராம் மாமாவுக்கு " எனக் கேட்க..

ஜீவி " ஒன்றும் இல்லை மாமா சும்மாதான் சாப்டீங்களான்னு ..கேட்டாங்க " என்றவளிடம் ,

செந்து , ஹிம் ... என்று ஏதோ கூற வாயெடுப்பதற்குள் , அலைபேசியில் லீலாவதிப் பாட்டி அழைத்துப் பேசிக்கொண்டிருக்க .. அதைப் பார்த்த செந்து ... ஜீவியிடம் தன் அறைக்குச் செல்வதாய் சைகை செய்துவிட்டு ஏதோ இனம் புரியாத கோபத்தில் அங்கிருந்து நகர்ந்தான் ,

அதைப் பார்த்த ஜீவி பாட்டியிடம் பேசிவிட்டு ஃபோனை வைத்தவள் , ச்ச.. இந்தப் பாட்டி மட்டும் ஃபோன் பண்ணவில்லை என்றால் , இந்நேரம் செந்து மாமா இங்கே இருந்திருப்பாங்க , இப்ப மாமா வெளியில் போய்டாங்க .. என்று நினைத்தவள் அறைக்குள் இருக்கப் பிடிக்காமல் வெளியேவந்தாள் ,

வாசலில் இருக்கும் மனோரஞ்சித மரத்தி்ன் அருகில் இருக்கும் ஸ்டோன்பெஞ்சில் அமர்ந்து காதில் ஹெட்ஃபோனை மாட்டி , இமை மூடி இசையில் இளகி இருந்தாள் ,

அங்கு வந்த செந்து , கைகளைக் கட்டியவாறு மரத்தில் தன் தோள் சாய்த்து , நின்று ஜீவியைப் பார்த்துக் கொண்டிருக்க ,

மனோரஞ்சித மலரில் வாசம் வாங்கிக் கொண்ட தென்றல் அவளின் குழலோடும் துகிலோடும் அலையாடி விளையாடியது ,

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now