அனிச்சம் பூ 43

2.5K 91 48
                                    

செந்து கூறிய அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டிருந்த ஆகாஷ் ' இன்று காலை நடந்த நிகழ்விற்கான விடை , ஜீவிகாவிடம் உள்ள காதலில் ஒளிந்திருக்கிறது , அவள் எப்பொழுது இவனிடம் காதலைக் கூறப் போகிறாளோ , அதற்குப் பிறகுதான் இவனுக்குத் தெளிவு பிறக்கும் , இதில் மற்றவர் இடையில் சமரசம் செய்ய ஒன்றுமில்லை என்று தோன்றியது , எனினும் செந்து கூறியது போல திடிரென்ற வில்கல் தேவையற்றது தானே ... ஏன் ஜீவி இவ்வாறு செய்தாள் ? ' என்று நினைத்தவன் ,

' இந்த செந்து , சாலட் ஊட்டிவிட்டேன்றான் , கால்ல முள்ளெடுத்தேன்னு சொல்றான் , ஓகே , ஆனா கல்யாணத்துக்கு முதல் நாள் ஸ்வீட் ஊட்டி விட்டேன்னு சொல்றான்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

' இந்த செந்து , சாலட் ஊட்டிவிட்டேன்றான் , கால்ல முள்ளெடுத்தேன்னு சொல்றான் , ஓகே , ஆனா கல்யாணத்துக்கு முதல் நாள் ஸ்வீட் ஊட்டி விட்டேன்னு சொல்றான் ... இது எப்படி ? கல்யாணத்துக்கு முதல் நாள் ரஷ்மி வரலைன்னு வீடே ரணகலத்துல இருந்துருக்கும் இவன் எந்த குதுகலத்துக்கு , ஸ்வீட் ஊட்டிக் கொண்டாடி இருப்பான் ? ( ராணா உனக்கு இந்த ஆராய்ச்சி இப்ப ரொம்ப அவசியம் ! ) ஒரு வேளை நம்ம மார்னிங் கொல்கட்டா கிளம்பும்போது சாப்பிட்டுட்டு இருந்தானே அப்ப ஊட்டி விட்ருப்பானோ ? இருக்கும் , அதுசரி அதைப்பண்ணினேன் , இதைபன்னினேன்னு பெரிய லிஸ்டே வச்சிருக்கானே ... அப்போ இவன் யாரை லவ் பண்ணினானு இந்த நிமிஷம் வரைக்கும் தெரியலையே ' என்று வடிவேலு ஸ்டெய்லில் மனதுக்குள் குழம்பிக் கொண்டிருந்தான் , ( எங்களுக்கும் அதே குழப்பம் தான் பாஸ்)

செந்தூரி , செந்துவை , சமாதானப்படுத்தும் நோக்கில் , "நடந்த விஷயங்களை வச்சு நீயா ஒரு முடிவுக்கு வராத செந்து ... எனக்கென்னவோ ஜீவி விலகிப் போறதுக்கு வேற எதும் காரணம் இருக்குமோன்னு தோனுது ... ஜுவி அப்படி நினைச்சிருந்தா உன்பக்கத்தில் கூட வரமாட்டா , ஆனா உன்னிடம் எப்பொழுதும் போல மாமா மாமான்னுதான் பேசுறா... நீயா எதையும் மனதில் போட்டுக் குழப்பிக்காத செந்து " என்றாள் .

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now